Categories: latest news

போலீஸ் டிரெஸ்ஸுக்கு நோ!. நயன்தாராவின் செண்டிமெண்ட்!.. நல்லா சிக்கிட்டாரு சுந்தர்.சி…

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தவர். ஐயா படத்தில் நடிக்க வரும்போது ஆம்னி பஸ்ஸில் வந்தவர் இப்போது எங்கு போனாலும் தனி விமானம் மூலம் செல்லும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.

ரஜினி, விஜய், அஜித், விஜய் சேதுபதி, சூர்யா, விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்டு நடித்து நம்பர் ஒன் நடிகையாகவும் மாறினார். அதோடு, கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறினார். ஒருகட்டத்தில் படத்தின் டைட்டில் தன் பெயருக்கு முன் லேடி சூப்பர்ஸ்டார் என போட வேண்டும் எனவும் அலப்பறை செய்தார்.

இவரின் வளர்ச்சி பல நடிகைகளுக்கும் பொறாமையை ஏற்படுத்தியது. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும், வாடகைத்தாய் மூலம் 2 குழந்தைகளுக்கும் அம்மாவாக மாறினார். இப்போது நம்பர் ஒன் நடிகையாக மாறினாரோ அப்போது முதலே நடிப்பதற்கு பல கண்டிஷன்களையும் போட துவங்கினார் நயன்தாரா. படத்தின் புரமோஷன் விழாவுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்தே போடுவார்.

இப்போது திருமணத்திற்கு பின் சென்னையில் மட்டுமே படப்பிடிப்பு, 3 மணி நேரம் மட்டுமே நடிப்பேன் என பல கண்டிஷன்களையும் போடுகிறாராம். எனவே, நயன்தாராவை நடிக்க வைக்கவே தயாரிப்பாளர்கள் யோசிக்கிறார்கள். ஒருபக்கம், நயன்தாராவுக்கு இப்போது மார்க்கெட்டும் இல்லை. கடந்த சில வருடங்களில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை.

ஆனாலும், நயன்தாரா தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. இப்போது சுந்தர்.சியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு வேடம் அம்மன் எனில், இன்னொரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு ஒரு செண்டிமெண்ட் உண்டு. படங்களில் போலீஸாக நடித்தாலும் போலீஸ் உடை அணிந்து நடிக்கமாட்டார். இமைக்கா நொடிகள், நெற்றிக்கண், ஜவான் போன்ற படங்களில் அவர் போலீஸ் என்றாலும் யூனிபார்ம் அணிந்திருக்கமாட்டார்.

மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கில் சுந்தர்.சியிடம் நயன் இதை சொல்ல ‘ வேண்டுமானால் நீங்கள் போலீஸ் உடையில் வரும் காட்சிகளை குறைத்துக்கொள்கிறேன். ஆனால், சில காட்சிகளில் நீங்கள் போலீஸ் யூனிபார்ம் போட்டு நடித்தே ஆகவேண்டும்’ என சுந்தர்.சி சொல்லிவிட்டாராம். சுந்தர்.சியிடம் தன் பாட்சா பலிக்காது என்பதால் அவர் சொன்னபடி நடித்து வருகிறாராம்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

6 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

7 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

14 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

15 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

16 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago