Categories: latest news

தெரியாது… எந்த ஏழு பேர்?.. ஓ சாரி!.. மீண்டும் மீண்டும் ரசிகர்களிடம் சிக்கும் ரஜினி!…

Rajinikanth: பொதுவாக நடிகர்கள் வேறொரு உலகத்தில் வாழ்வார்கள். காலை எழுந்தவுடன் படப்பிடிப்புக்கு கிளம்பி மாலை வருவார்கள். அதன்பின் சினிமா தொடர்பான விஷயங்களை விவாதிப்பார்கள். அல்லது, புதிய இயக்குனர்களிடம் கதை கேட்பார்கள். நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சனைகளை கவனிக்க அவர்களுக்கு நேரமே இருக்காது.

பல நடிகர்களுக்கு நேரம் இருந்தாலும் தெரிந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். முன்பெல்லாம் அது வெளியே தெரியாது. இப்போது செய்தியாளரக்ள் கேள்வி கேட்கும் போது அது தெரிந்துவிடுகிறது. இதில், அதிகம் சிக்கியது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துதான். ஒரு விஷயத்தை பற்றி அவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது அவர் யாரை மதிக்கிறாரோ அவர்கள் சொல்வதை நம்புவார். அதையே செய்தியாளர்களிடமும் சொல்லுவார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த ஊர் மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அப்பாவி மக்கள் 13 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். இதுபற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொன்ன ரஜினி ‘கூட்டத்தில் ஷமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள். அவர்கள்தான் முதலில் போலீசாரை தாக்கினார்கள்’ என சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

‘மக்கள் பக்கம் நிற்காமல் இவர் ஏன் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறார்?’ என பலரும் இவரை விமர்சனம் செய்தார்கள். ஒருமுறை, ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் 7 பேர் தொடர்பான கேள்விக்கு ‘எந்த ஏழு பேர்?’ என அப்பாவியாக கேட்டு ட்ரோலில் சிக்கினார் ரஜினி.

அரசியல் கட்சி துவங்கிய போது ‘என்னிடம் ‘உங்கள் கொள்கை என்ன?’ என நிருபர் கேட்டார். தலை சுத்திடிச்சி’ என அவர் சொல்ல பலரும் அவரை ட்ரோல் செய்தார்கள். இந்நிலையில், தற்போது மீண்டும் ட்ரோலில் சிக்கியிருக்கிறார் ரஜினி. நேற்று சென்னை விமான நிலையத்தில் ‘திருவண்ணாமலையில் 7 பேர் இறந்து போயிருக்காங்க.. அது பற்றி உங்கள் கருத்து?’ எனக்கேட்க ரஜினியோ ‘எப்போது?’ எனக்கேட்டார்.

நிருபர் ‘நிலச்சரிவில் சிக்கி இறந்துட்டாங்களே’ என சொல்ல ‘ஓ மை காடி. ஐ யம் சாரி’ என சொல்லிவிட்டு போய்விட்டார். இதையடுத்து.. தெரியாது.. சாரி.. எப்போது?… எந்த ஏழு பேர்?.. இதெல்லாம் தலைவரின் பன்ச் வசனங்கள் என நெட்டிசன்கள் ரஜினியை கலாய்த்து வருகின்றனர்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago