Categories: latest newstelevision

ரியாலிட்டி ஷோவில் நடுவராக களமிறங்கும் பார்த்திபன்! அட இந்த நிகழ்ச்சிக்கா?

மக்களை சந்தோஷப்படுத்த பல தொலைக்காட்சி நிறுவனங்கள் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன. மக்களையும் உற்சாகப்படுத்த வேண்டும். அதே நேரம் குழந்தைகளையும் ஈர்க்க வேண்டும். இப்படி எல்லாவித சவால்களையும் எதிர்கொண்டு அதையும் மீறி சில நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்து வருகின்றன. குறிப்பாக ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சி ஆகியவை இந்த விஷயத்தில் போட்டி போட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் மட்டும் தான் எண்ணற்ற ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன. அதனாலேயே மற்ற தொலைக்காட்சிகளை விட விஜய் தொலைக்காட்சிக்கு இன்று வரை ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இப்போது அதற்கு இணையாக போட்டி போடும் தொலைக்காட்சி நிறுவனம் ஜீ தமிழ். இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதியதாக ஒரு நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளன.

சிங்கிள் பசங்க என பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் பார்த்திபன் நடுவராக வர உள்ளார் என்ற ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவருடன் இணைந்து சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா மற்றும் பாலிவுட் பிக் பாஸ் புகழ் ஸ்ருதிஹா அர்ஜுன் ஆகியோரும் நடுவர்களாக இணைய உள்ளனர். ஆல்யா மானசாவுக்கும் ஸ்ருதிகா அர்ஜுனுக்கும் ஏற்கனவே ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர்.

இதில் பார்த்திபன் இணைந்து இருப்பது முற்றிலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் இது எப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். பார்த்திபனை பொறுத்த வரைக்கும் அவர் ஒரு வார்த்தை வித்தகர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இப்படி இருக்கும் பொழுது அவர் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கு கொள்வது மிகவும் எதிர்பார்க்கப்படும் விஷயமாகவே தெரிகிறது.

alyamanasa

ஆல்யா மானசாவை பொறுத்தவரைக்கும் முதலில் விஜய் தொலைக்காட்சி அதன் பிறகு சன் தொலைக்காட்சி இப்போது ஜீ தமிழ் என ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமாக மாறி மாறி வருகிறார். ஸ்ருதிஹா அர்ஜுனும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். அதன் பிறகு ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஈர்த்தவர். அவரும் இப்போது இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகவே பார்க்கப்படுகிறது .இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

1 hour ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

11 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

12 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

19 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

20 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

21 hours ago