Categories: latest news

மாற்றி மாற்றி பேசி ட்ரோலில் சிக்கும் விஜய்!.. தளபதிக்கு அரசியல் செட் ஆகுமா?….

Actor Vijay: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். இவர் 200 கோடி சம்பளம் கேட்டாலும் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர் அதிகம் பேசமாட்டார். படப்பிடிப்பு தளங்களில் கூட யாரிடமும் அதிகம் பேசாமல் கேரவானில் இருப்பார். நடிக்க கூப்பிட்டால் வந்து நடித்துவிட்டு மீண்டும் கேரவானுக்குள் சென்றுவிடுவார்.

மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர். யாருடன் கலகலப்பாக பேசும் நபர் அவர் இல்லை. ஆனால், இப்படிப்பட்டவர்தான் இப்போது அரசியல்வாதி ஆகியிருக்கிறார். அவரின் நிஜ சுபாவம் சினிமா தொழிலை பாதிக்கவில்லை. ஏனெனில், துவக்கத்தில் விஜய் மீது பலருக்கும் கோபம் வந்தாலும் ஒரு கட்டத்தில் ‘விஜய் இப்படித்தான்’ என்பதை பலரும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்கள்.

விஜயின் அரசியல்: ஆனால், அரசியல் அப்படி அல்ல. நிறைய பேச வேண்டும். அதுவும் மக்களை கவரும்படி பேச வேண்டும். ஆளும் கட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி போராட வேண்டும். செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்து இதுவரை செய்தியாளர்களையே சந்திக்காத ஒரே அரசியல்வாதி விஜய் மட்டுமே. அதோடு, பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது. அதோடு, விஜய் மாற்றி மாற்றி பேசி வருவதாகவும் பேச்சு எழுந்திருக்கிறது.

அரசியல் தலைவர்கள்: லியோ ஆடியோ விழாவில் பேசிய ‘விஜய் சினிமாவை சினிமாவாக மட்டுமே பாருங்கள். அது ஒரு பொழுதுபோக்கு’ என்று பேசினார். ஆனால், அரசியல்கட்சி துவங்கியபின் விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது ‘எதுக்கெடுத்தாலும் கூத்தாடின்னு சொல்றீங்க. சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமில்லை. சினிமாவிலிருந்து வந்தவங்கதான் அரசியல் பெரிய அளவில் சாதிச்சி காட்டினாங்க’ என பேசினார். ‘அவர்களே.. இவர்களே என பேச மாட்டேன் என அங்கு பேசிய விஜயே ஒரு இடத்தில் ‘அவர்களே இவர்களே’ என பேசினார்.

இரட்டை நிலைப்பாடு: அதேபோல், மாநாட்டில் ஆளுனருக்கு எதிராக தீர்மானம் போட்ட விஜயே கொஞ்ச நாளில் ஆளுநரை சந்தித்து மனுவும் கொடுத்தார். இதையெல்லாம் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ‘விஜய் பேசுவது ஒன்று. நடந்துகொள்வது ஒன்றாக இருக்கிறது’ என சிலர் பதிவிட்டு வருகிறார்கள். தான் பேசுவதை மக்கள் எவ்வளவு கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

6 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

7 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

7 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

7 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

10 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

11 hours ago