நடிகர் பிரபுதேவா தனது இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மூத்த நடன இயக்குனரான சுந்தரம் அவர்களுக்கு ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத், பிரபு தேவா என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூவருக்குமே நடனம் மற்றும் நடிப்பில் இருக்கும் திறமையால் 90களில் பல ரசிகர்களை கவர்ந்த்துள்ளனர். அதிலும் பிரபுதேவாவின் ரசிகர்கள் எண்ணற்ற அளவில் உள்ளனர்.
பிரபுதேவா இந்து, காதலன், லவ் பேர்ட்ஸ், காதலா காதலா, பெண்ணின் மனதை தொட்டு, டபுள்ஸ், உள்ளம் கொள்ளை போகுதே உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அக்னி நட்சத்திரம், இதயம், ஜென்டில்மேன் போன்ற படங்களில் நடனமாடி இருந்தாலும் அவர் கதாநாயகனாக நடித்திருந்த மின்சார கனவு படத்தில் வரும் வெண்ணிலவே பாடலுக்கு சிறந்த நடன இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றார்.
டான்ஸ் மற்றும் நடிப்பை தொடர்ந்து போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய பல படங்களை இயக்கியும் தயாரித்தும் உள்ளார். கடைசியாக அவர் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்த கோட் படத்தில் நெகடிவ் ரோலிலும் அசத்தியிருந்தார்.
பிரபுதேவாவின் முதல் மனைவி ராம்லாத், இவர்களுக்கு இரு மகன்கள் அதில் முதல் மகன் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டான். அதன் பின் பிரபுதேவாநடிகை நயந்தாராவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதை தொடர்ந்து ராம்லாத் வழக்கு தொடர்ந்து பல போராட்டத்திற்கு பின்னர் தன் கணவரை நயந்தராவிடம் இருந்து மீட்டெடுத்தார். பின்னர் பிரபுதேவா ராம்லாத்தை சட்டபூர்வமாக விவாகரத்து செய்து டாக்டர் ஹிமான் சிங் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்நிலையில் பிரபு தேவா தன் இரண்டாவது மனைவி ஹிமானி சிங்குடன் கோவிலுக்கு சென்று பக்தியுடன் கடவுளை வணங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…