Categories: latest news

உண்மையான புஷ்பா நம்ம கேப்டன்தான்!.. பிரேமலதா சொல்றத கேளுங்க!..

Vijayakanth: விஜயகாந்த் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவர் எல்லோருக்கும் உதவுபவர், நல்லவர், ஈர மனசுக்காரர், யாருக்கும் எந்த துரோகமும் செய்யாதவர், குறிப்பாக சுயநலம் இல்லாதவர் என்பதுதான். அவர் வாழ்ந்த காலத்தின் மூலம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் அவர் விட்டு சென்றிருப்பது இதுதான்.

உதவி செய்வதில் அவர் பாகுபாடு பார்த்ததே இல்லை. சினிமா சாப்பாட்டில் இருந்த பாகுபாட்டை முதலில் உடைத்தவர் அவர்தான். ஷூட்டிங்கில் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்கு ஒரு சாப்பாடு மற்ற தொழிலாளர்களுக்கு வேறு சாப்பாடு என இருந்தபோது அதை மாற்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் விஜயகாந்துதான்.

சொன்னதோடு மட்டுமில்லாமல் தான் தயாரிக்கும் படங்களில் அதை செய்தும் காட்டினார். மற்ற தயாரிப்பாளர்களையும் அதை செய்ய வைத்தார். தன்னால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருந்தார். எவ்வளவே பேரின் கல்வி, திருமணம், ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு உதவி செய்திருக்கிறார்.

சினிமாவில் இவரால் வாழ்ந்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். பல புதிய நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை உருவாக்கியிருக்கிறார். இந்நிலையில்தான், உண்மையான புஷ்பா அல்லு அர்ஜூன் இல்லை. அது கேப்டன் விஜயகாந்துதான் என அவரின் மனைவி பிரேமலதா கூறியிருக்கிறார்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா மற்றும் புஷ்பா 2 ஆகிய படங்கள் வெளியாகி ஹிட் அடித்தது. அதிலும், புஷ்பா 2 படம் 1800 கோடியை வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது. செம்மரக்கட்டை கடத்தும் கும்பல் பற்றிய கதை இது. இந்த தொழிலில் உள்ள போட்டிகள், கடத்தல் கும்பலை பிடிக்க நினைக்கும் போலீஸ் அதிகாரி, இதற்கு பின்னாள் உள்ள அரசியல் என பல விஷயங்கள் இந்த படத்தில் டீல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய பிரேமலதா ‘ திருவண்ணாமலையில் வேலை வாய்ப்பு இல்லாஅமல் பக்கத்து மாநிலத்திற்கு சென்று செம்மரக்கட்டையை வெட்டி நம் தமிழ் மக்கள் கஷ்டப்பட்ட போது உங்கள் வீட்டு பையனாக, நான் இருக்கிறேன் என சொல்லி பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கு நேரடியாக சென்று நிதி உதவி வழங்கி அவர்களுடைய துயரிலே பங்கேற்று உண்மையாக தெய்வமாக வாழ்ந்தவர் நமது கேப்டன். இன்றைக்கு செம்மரக்கட்டை பற்றி புஷ்பா படம் எடுத்திருக்கிறார்கள். ஆனால், உண்மையான புஷ்பா நமது கேப்டன்தான்’ என பேசியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

13 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

14 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

20 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago