Categories: latest news

கேப்டனுக்கு இதுதான் உண்மையான சந்தோஷம்!. பிரேமலதா நெகிழ்ச்சி பேட்டி!..

Vijayakanth: விஜயகாந்த் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அவரின் ஈகை குணம்தான். மதுரையில் இருந்தபோது அவரை சுற்றி எப்போதும் நண்பர் கூட்டம் இருக்கும். அவர்கள் எல்லோரையும் சினிமாவுக்கு அழைத்து செல்வது, சாப்பாடு வாங்கி கொடுப்பது என எல்லா செலவையும் அவர்தான் செய்வார்.

சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே தனது நண்பர் இப்ராஹிம் ராவுத்தருடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். துவக்கத்தில் சில அவமானங்களை சந்தித்தாலும் ஒரு கட்டத்தில் வாய்ப்பு வந்தது. ஆனால், அப்படி அவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை. அதன்பின் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். எப்போதும் எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும், தன்னால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும், மற்றவர்களை மேலே தூக்கிவிட வேண்டும் என்கிற எண்ணம் எப்போதும் விஜயகாந்துக்கு உண்டு.

அதனால்தான் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வந்ததும் தனது அலுவகத்திற்கு எப்போது யார் வந்தாலும் அவர்களுக்கு உணவு போட்டார். அவர் போட்ட சாப்பாட்டில் கஷ்டப்பட்ட பல கலைஞர்கள் உயிர் வாழ்ந்தார்கள். அதனால்தான் அவர்கள் இப்போதும் விஜயகாந்த் பற்றி நன்றியுணர்ச்சியோடு நினைவு கொள்கிறார்கள்.

நடிகர், நடிகைகளுக்கு ஒரு மாதிரி உணவு, மற்றவர்களுக்கு வேறு மாதிரி உணவு என்பதுதான் 80களில் சினிமாவில் நடைமுறையாக இருந்தது. இப்போதும் பல நிறுவனங்கள் அப்படித்தான் சாப்பாடு போடுகிறது. இதை மாற்றி ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரி உணவு என்பதை அறிமுகம் செய்ததே விஜயகாந்துதான். வேறு தயாரிப்பாளர் எனில் அதற்கான செலவை தனது சம்பளத்தை பிடித்துக்கொள்ள சொன்னவர் அவர்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் ‘கேப்டனுக்கு சமைக்க தெரீயாது. ஆனால், சமையலை தாண்டி அவருக்கு ஒன்னுதான் தெரியும். அது எல்லோரையும் அமர வைத்து சாப்பாடு பரிமாறுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். அதில்தான் அதிக சந்தோஷப்படுவார். வீட்டிற்குக் யாராவது உறவினர் வந்தால் நான் தோசை ஊற்றுவேன். அவர்தான் அதை எடுத்துக்கொண்டு போய் பரிமாறுவார். அவர்கள் சந்தோஷமாக சாப்பிடுவதை பார்ப்பது அவருக்கு அவ்வளவு சந்தோஷம்’ என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

3 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

4 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

5 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

11 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

12 hours ago