Categories: latest news

குடித்து விட்டு ஓட்டல்ல கடும் ரகளை… போதையில் அப்படியா கேட்டாரு விஜய் சேதுபதி?

விஜய்சேதுபதி கஷ்டப்பட்டு சினிமாவில் வளர்ந்து தனக்கென ஒரு மார்க்கெட்டைப் பிடித்தார். ஆனால் அவர் பலகோடி கடன் தொல்லையால் கதை தேர்வு செய்யாமல் படங்களில் நடித்து தோல்விப்படங்களாகக் கொடுக்க ஆரம்பித்தார். இவர் ஆரம்பகாலத்தில் குடித்து விட்டு செய்த ரகளை குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பாருங்க.

விஜய் சேதுபதி ஆரம்பத்துல குடும்ப கஷ்டம் காரணமா துபாய்க்கு வேலைக்குப் போனார். அவருக்கு சிறு வயது முதலே சினிமாவில் நடிக்கணும்னு ஆர்வம். துபாயில் வேலை பார்த்த அவருக்கு ஒரு கட்டத்துக்கு மேல வேலை பார்க்க முடியல. அப்புறம் அங்கே இருந்து கிளம்பி சினிமாவுல நடிக்கணும்னு வந்து விட்டார். ரொம்ப போராடி சின்ன சின்ன வேடங்கள்ல நடிக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல கூட்டத்துல ஒருவராகத் தான் வருவார். அப்புறம் அவருக்குக் கிடைச்ச வாய்ப்பு தான் சீனுராமசாமி இயக்கத்தில் வந்த தென்மேற்குப் பருவக்காற்று. அந்தப் படத்திற்குப் பிறகு நாளைய இயக்குனர்களின் படங்களில் நடித்தார். பீட்ஷா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படங்களில் நடித்தார். படங்கள் பெரிய ஹிட் ஆனது.

இதனால் தொடர்ந்து பல பெரிய தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுத்தாங்க. அந்த காலகட்டத்தில் விஜய்சேதுபதி நன்றியோடு பல வேலைகள் செய்தார். ஆரம்ப காலகட்டங்களில் அவருக்கு வாய்ப்பு கொடுத்த பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து கால்ஷீட் தேதி கொடுத்தார். சின்ன சின்ன கேமியோ வேடங்களில் நடித்தார்.

அந்தப் படங்கள் சரியாகப் போகாததால் மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. இந்தக் காலகட்டத்தில் விஜய்சேதுபதி பெரிய தப்பு பண்ணிட்டாரு. அவர் ஒரு 5ஸ்டார் ஓட்டல்ல போய் ரிசப்ஷன்ல உட்கார்ந்து ‘நான் பெரிய நடிகன். என் படங்கள் நல்லா ஓடிருக்கு. எனக்குப் பிரியாணி இங்கே கொண்டு வந்து கொடுங்க’ன்னு கேட்டாராம்.

‘இல்ல சார். பிரியாணி இங்கெல்லாம் கொண்டு வந்து கொடுக்க முடியாது. நீங்க ரெஸ்டாரண்ட் வாங்க. அங்க வந்து சாப்பிடுங்க’ன்னு அங்கே வேலை பார்த்தவர்கள் சொன்னாங்க. ‘இல்ல. நான் அங்கெல்லாம் வர மாட்டேன். எனக்கு இங்கேயே பிரியாணியைக் கொண்டு வந்து கொடுங்க’ன்னு அடம்பிடிச்சி, சேட்டை, சண்டை எல்லாம் போட்டாரு.

உடனே கூட வந்தவங்க எல்லாரும் அவரை சமாதானப்படுத்தி கார் ஏறி வீட்டுக்கு அனுப்பினாங்க. இது அன்னைக்கு ரொம்ப பெரிய செய்தியாகி பத்திரிகைல எல்லாம் வந்துடுச்சு. அதுகுறித்து பத்திரிகையாளர்கள் எல்லாம் கேட்டபோது நான் தப்பு பண்ணிட்டேன். ஓவரா குடிச்சதால இந்த மாதிரி பண்ணிட்டேன். இந்த மாதிரி புகார் இனி எந்தக் காலத்திலும் வராதவாறு பார்த்துக்குவேன்னு சொன்னாரு. அந்த உத்தரவாதத்தை இன்னைக்கு வரைக்கும் விஜய்சேதுபதி காப்பாத்துறாரு என்கிறார் பாலாஜி பிரபு.

ஜூங்கா என்று ஒரு படத்தை சொந்தமாகத் தயாரித்தும் பெரிய அளவில் கடனாளியானார் விஜய் சேதுபதி. தொடர்ந்து கடனை அடைப்பதற்காக பல படங்களைக் கதை தேர்வு செய்யாமல் நடிக்க ஆரம்பித்தார். அதனால் பிளாப் ஆயின. கடைசியாக வந்த ஏஸ் படம் கூட தோல்வி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

எம்ஜிஆருடன் நேருக்கு நேராக மோதிய பானுமதி… அடுத்து நடந்த தரமான சம்பவம்..!

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…

13 minutes ago

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

11 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

19 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago