அட்டகத்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான சிவி குமார் எனும் சி விஜயகுமார் பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி, முண்டாசுப்பட்டி, எனக்குள் ஒருவன், இறுதிச்சுற்று, காதலும் கடந்து போகும், இறைவி, ஜாங்கோ, பீட்சா 3 மற்றும் சூது கவ்வும் 2 உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.
இயக்குனராக மாயவன் மற்றும் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக அவர் தயாரிப்பில் வெளியான சூது கவ்வும் 2 திரைப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படம் தோல்வியை அடைந்தது.
நீயா நானா நிகழ்ச்சிக்கு பிறகு விமர்சனத்திற்கு பணம் கொடுக்கிறார்களா? வாங்குகிறார்களா? என்கிற விவாதம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பெயிட் ரிவ்யூ இருக்கத்தான் செய்கிறது என்றும் தயாரிப்பாளர்கள் நெகட்டிவ் விமர்சனத்தை விரும்புவதில்லை அதற்காக சில முன்னணி யூடியூப் விமர்சகர்களுக்கு ஆயிரம் முதல் லட்சம் வரை பணம் கொடுப்பதாக கூறியுள்ளார்.
எதற்காக விமர்சகர்களுக்கு தயாரிப்பாளர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்றால், தியேட்டரில் படம் வெளியான பின்னர் தான் பல ஓடிடி நிறுவனங்கள் புதிய படங்களை வாங்குகின்றன. அப்படி இருக்கும் சூழலில் விமர்சனங்களை அந்த நிறுவனங்கள் ஒரு முக்கிய அங்கமாக கணக்கிடுவதால் பெரும்பாலும் தங்களது படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் தயாரிப்பாளர்கள் கவனமாக உள்ளனர் என்று தயாரிப்பாளரான சி.வி. குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…