Categories: latest news

அரெஸ்ட் பண்ணதால் எகிறிய புஷ்பா 2 வசூல்!.. 2 நாளில் மட்டும் இவ்வளவு கோடியா?!..

Pushpa 2: தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். கடந்த 20 வருடங்களாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் செம்மரக்கட்டை கடத்தலை அடிப்படையாக வைத்து இவர் நடித்த புஷ்பா படம் பேன் இண்டியா சினிமாவாக வெளியாகி ஹிட் அடித்தது.

தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி மொழிகளிலும் இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. முதல் பாகம் எடுக்கும்போதே இப்படம் 2 பாகம் என முடிவெடுத்தனர். முதல் பாகம் வெற்றி என்பதால் இரண்டாம் பாகத்தை மிகவும் அதிக செலவு செய்து எடுத்தார்கள். சுமார் 400 கோடி வரை செலவு செய்ததாக சொல்லப்படுகிறது.

அப்படி டிசம்பர் 5ம் தேதி வெளியான புஷ்பா 2 படம் எல்லா மொழியிலும் வரவேற்பை பெற்று இதுவரை 1500 கோடியை நெருங்கிவிட்டது. 10 நாட்களில் 1000 கோடியை அள்ளிய இந்த படம் 2 நாட்களில் 490 கோடியை வசூல் செய்திருக்கிறது. புஷ்பா 2 படம் வெளியானபோது அப்படத்தின் ஹீரோ அல்லு ஆர்ஜூன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சிறப்பு காட்சியை பார்க்க போனார்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் அவரின் மகனும் சிக்கினார்கள். இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அந்த பெண் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜூன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஒருபக்கம், அந்த பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி அளித்தார். மேலும், தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனுவும் அளித்தார். ஆனால், போலீசார் அல்லு அர்ஜூனை கைது செய்தனர். நீதிமன்றம் அவரை சிறையில் வைக்க உத்தரவிட்டது.

இந்த விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அல்லு அர்ஜூன் மீது தவறே இல்லை. அது ஒரு விபத்து என பலரும் சொன்னார்கள். ராஷ்மிகா உள்ளிட்ட நடிகைகளும் அல்லு அர்ஜூனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். அன்று இரவு நீதிமன்றம் பெயில் கொடுத்தும் அல்லு அர்ஜூனை வெளியே விடாமல் அடுத்த நாள் காலையே அவரை விட்டனர்.

சிறையிலிருந்து வெளியே வந்த அல்லு அர்ஜூன் ‘அது ஒரு சோக நிகழ்வுதான். ஆனால், எனக்கும் அதற்கு சம்பந்தம் இல்லைல். அது ஒரு விபத்து. அந்த குடும்பத்தினருக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறேன். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அந்த சிறுவனை சென்று பார்க்க முடியவில்லை’ என சொல்லி இருந்தார்.

ஒருபக்கம் அல்லு அர்ஜூனை கைது செய்ததன் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், அல்லு ஆர்ஜூனின் கைதுக்கு பின் புஷ்பா 2 படத்தின் வசூல் 70 மடங்கு அதிகரித்துள்ளது. அதனால்தான் 2 நாட்களில் இப்படம் 490 கோடி வசூலை அள்ளியதாக சொல்லப்படுகிறது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

6 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

13 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago