Categories: latest news

உயிரிழந்த பெண்ணிற்கு புஷ்பா 2 படக்குழு நிவாரணம்!.. எத்தனை கோடினு பாருங்க!..

புஷ்பா 2: இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் புஷ்பா 2. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் ஆகியோர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

படம் வெளியான நாள் முதலே ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து தங்களது வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். தெலுங்கு மொழியை தாண்டி ஹிந்தியில் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் படம் புதிய சாதனையை படைத்திருக்கின்றது. கிட்டத்தட்ட 1600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. விரைவில் 2000 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கூட்ட நெரிசல்:

டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்னதாக அதாவது டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படம் ஸ்பெஷல் காட்சியாக திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு அல்லு அர்ஜுன் வர இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து அங்கு அவரின் ரசிகர்கள் லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கின்ற பெண் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வழக்கு பதிவு:

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து அல்லு அர்ஜுனை கைது செய்தார்கள். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அல்லு அர்ஜுன் தரப்பிலிருந்து ஜாமீன் வழங்க கோரி மனு அளித்திருந்த நிலையில் உயர்நீதிமன்றம் அவருக்கு 4 வாரத்திற்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. பின்னர் மறுநாளே சிறையில் இருந்து அவர் வெளியில் வந்தார்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. அம்மாநிலத்தின் முதல்வரான ரேவந்த் ரெட்டி தொடர்ந்து அல்லு அர்ஜுன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அல்லு அர்ஜுன் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கத்தான் திரையரங்கு சென்றேன்.

ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக மூன்று ஆண்டுகள் சிரமப்பட்டு புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்தேன். கடந்த 20 ஆண்டுகளாக தன்னுடைய திரைப்படம் வெளியான போது அதே நாள் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துள்ளேன். ஆனால் இந்த முறை எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டதும் நான் மிகவும் கவலை அடைந்தேன் என்று கூறியிருந்தார்.

மேலும் இந்த சம்பவம் நடந்த மறுநாளே அல்லு அர்ஜுன் தனிப்பட்ட முறையில் அவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி கொடுத்திருந்த நிலையில் தற்போது படக்குழுவினர் 2 கோடி ரூபாய் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள். அல்லு அர்ஜுன் ஒரு கோடி ரூபாயும், இயக்குனர் சுகுமார் 50 லட்சமும், மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 50 லட்சமும் கொடுத்துள்ளது.

ramya suresh

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

6 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

7 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

8 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

21 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

21 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

1 day ago