புஷ்பா 2: இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஸ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது புஷ்பா 2 திரைப்படம். முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியை காட்டிலும் இரண்டு மடங்கு இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது ஆதரவுகளை கொடுத்து வருகிறார்கள்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. ரிலீசான 13 நாட்களில் மட்டும் இந்தியாவில் 1100 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. நிச்சயம் இந்த திரைப்படம் 2000 கோடி வசூலை எட்டும் என்று படக்குழுவினர் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி இரவு ஹைதராபாத்தில் இருக்கும் சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சி வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக 8 வயதான சாய் தேஜா என்பவர் தனது குடும்பத்துடன் சந்தியா திரையரங்குக்கு வந்திருந்தார். பிரீமியர் ஷோ பார்ப்பதற்கு அல்லு அர்ஜுன் அங்கு வந்திருக்கின்றார்.
எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அல்லு அர்ஜுன் அங்கு வந்ததால் ரசிகர்கள் அவரை பார்ப்பதற்கு முந்தி அடித்துக் கொண்டு சென்றனர். அப்போது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க வேண்டியதாக இருந்தது. அந்த சமயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாஸ்கரின் மனைவியான ரேவதி உயிரிழந்தார். பாஸ்கருக்கும் அவரது மகளுக்கும் லேசான காயம் ஏற்பட்ட நிலையில் அவரின் மகன் சாய் தேஜா படுகாயம் அடைந்தார்.
பின்னர் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வந்தது. சிறுவனின் மருத்துவ செலவுக்கு உதவி செய்வதாக புஷ்பா 2 படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாய் தேஜா தற்போது மூளை சாவு அடைந்து விட்டதாக இன்று மதியம் செய்திகள் வெளியானது.
சிறுவன் சாய் தேஜா கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த மருத்துவமனைக்கு சென்ற ஹைதராபாத் கமிஷனர் சிவி ஆனந்த் இந்த செய்தியை மறுத்துள்ளார்.
சிறுவனுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனவும், அந்த பாதிப்பு சரியாக நீண்ட நாட்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த சிறுவன் தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் சிகிச்சையில் இருப்பார் என ஹைதராபாத் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…