Categories: latest news

1000 கோடி பட்ஜெட்!.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் போலயே.. ராஜமௌலினா பின்ன சும்மாவா!..

இயக்குனர் ராஜமௌலி: தென்னிந்திய சினிமாவில் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமாக உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற பெருமை எஸ்எஸ் ராஜமௌலியை சேரும். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கின்றது. மகதீரா தொடங்கி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கின்றது.

அதிலும் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கார் வரை சென்று சாதனை படைத்திருந்தது. ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படங்களையும் இயக்காமல் இருந்து வந்த இயக்குனர் ராஜமௌலி தற்போது தெலுங்கு சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருக்கும் மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

அந்த வகையில் இந்த திரைப்படம் தொடர்பான தகவல் உறுதியான நிலையில், இன்று இப்படத்தின் பூஜை தொடங்கி இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் கூறிவருகிறார்கள். பொதுவாக ராஜமௌலி ஒரு படத்திற்கு ஓராண்டுக்கும் மேலாக ஒரு நடிகரிடம் இருந்து கால்சீட் வாங்குவார். அதனால் இந்த திரைப்படம் பிக்கப் ஆவதற்கு இவ்வளவு நாட்கள் ஆனதாக கூறப்படுகின்றது.

தற்போது படத்தின் பூஜை இன்று தொடங்கி இருக்கின்றது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்‌ஷன் மற்றும் சாகச காட்சிகளுடன் உருவாக இருப்பதால் ஆறு மாதத்திற்கு மேலாகவே பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படத்திற்காக நடிகர் மகேஷ்பாபு கடந்த ஆறு மாதங்களாக தனது உடலில் சில மாற்றங்களையும் செய்து வந்திருக்கின்றாராம்.

இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக அதிரடி ஆக்சன்களில் நடிப்பதற்காக பிரியங்கா சோப்ராவை நடிக்க வைப்பதற்கு முடிவு செய்து இருக்கின்றார் ராஜமௌலி. இதற்காக அவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றதாம். தற்போது பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்கு சென்றிருக்கும் பிரியங்கா சோப்ரா அங்கு தொடர்ந்து பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படம் 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாகவும், மேலும் இந்த திரைப்படம் ஒரு ஜங்கிள் அட்வென்ச்சர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுப்பதற்கு இயக்குனர் ராஜமௌலி திட்டமிட்டு இருக்கின்றார். மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி படத்தின் முதல் பாகம் 2027 ஆம் ஆண்டு வெளியாகும் எனவும், இரண்டாவது பாகம் 2029 ஆம் ஆண்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருக்கின்றது.

மேலும் பிரியங்கா சோப்ரா இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பிரிதிவிராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் படம் தொடர்பான அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தெரிவித்து வருகிறார்கள்.

1000 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக இருப்பதால் நிச்சயம் இது ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பொதுவாக ராஜமவுலி திரைப்படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. இதில் இவ்வளவு பெரிய பட்ஜெட் என்றால் சொல்லவா வேண்டும்.

ramya suresh

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago