Categories: latest news

தன் கல்லறை எப்படி இருக்க வேண்டும்? உயிருடன் இருக்கும் போதே கட்டி அழகு பார்த்த ராஜேஷ்

இன்று தமிழ் திரைப்பட நடிகரும் எழுத்தாளருமான ராஜேஷின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்னி பருவத்திலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஜேஷ் முதல் படமே இருநூறு நாட்களை தாண்டி ஓடி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதிலிருந்து அவருடைய சினிமா கிராஃபும் படிப்படியாக உயர்ந்தது.

ஹீரோவாக பல படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்த ராஜேஷ் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரம் குணசித்திர கதாபாத்திரம் என தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். அரசியல் தலைவர்கள் பழம்பெரும் திரைப்பட நடிகர்கள் என அனைவருடனும் நட்பாக பழகியவர் ராஜேஷ்.

தன்னுடைய எழுத்துக்கள் மூலமாகவும் பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இவருக்கு தெரியாத எந்த விஷயங்களும் இல்லை என்று சொல்லலாம். திரைப்படங்களைப் பற்றியும் தமிழ் சினிமாவின் போக்கு வளர்ச்சி இவைகளை பற்றியும் எப்போது எந்த நேரத்திலும் ராஜேஷிடம் கேட்கலாம். அந்த அளவுக்கு சினிமா அனுபவம் வாய்ந்த ஒரு மகா கலைஞர் ராஜேஷ்.

இவருடைய மறைவு அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல பிரபலங்கள் இவருக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தன்னுடைய கல்லறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முன்பே கட்டி அழகு பார்த்திருக்கிறார் ராஜேஷ். தன்னுடைய 40 வயதில் தனக்குத்தானே ஒரு கல்லறையை கட்டி அந்த கல்லறை எப்படி இருக்க வேண்டும் அதில் எந்த மாதிரி வசனங்கள் அமைய வேண்டும் என்பது முதற்கொண்டு அனைத்தையும் செய்து இருக்கிறாராம் ராஜேஷ்.

அந்த செய்தி தான் இப்போது வைரல் ஆகி வருகின்றது. இதற்கிடையில் அவருடைய தம்பியும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவருடைய கடைசி நொடி பற்றியும் பகிர்ந்திருக்கிறார் .இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவருடைய உடல்நலம் கொஞ்சம் சரியில்லாமல் இருந்திருக்கிறது. மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவரை அழைத்து பல்ஸ் செக் பண்ண வேண்டும் என சொன்னாராம் ராஜேஷ்.

அதன் பிறகு அவருடைய மூச்சு திணறல் அதிகமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போகலாம் என ஆம்புலன்ஸை வரவழைத்து போயிருக்கிறார்கள். போகும் வழியிலேயே அவருடைய கண்கள் எல்லாம் மேலே போய் மிகவும் சோர்வுற்று காணப்பட்டு இருந்திருக்கிறார். அதன் பிறகு தான் ஆம்புலன்ஸிலேயே அவர் இறந்தார் என அவருடைய தம்பி கூறி இருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago