Categories: latest news

லட்சக்கணக்கில் சம்பளத்தை ஏத்திய ரஜினி! ஷாக் ஆன பாலசந்தர்.. அவர் கேட்ட வார்த்தை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 80களில் ஆரம்பித்த இவருடைய சினிமா பயணம் இன்று வரை 50 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இவருக்கு பொன்விழா எடுக்க வேண்டும் என திரையுலகில் சம்பந்தப்பட்ட பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.

பெரிய அளவில் அந்த விழா எடுக்கப்பட வேண்டும் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பாலும் ஸ்டைலாலும் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இவரை அறிமுகப்படுத்திய பெருமை கே. பாலச்சந்தரையே சேரும்.

அபூர்வ ராகங்கள் படத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியதன் மூலம் தொடர்ந்து பாலச்சந்தரின் பல படங்களில் நடிக்க வைத்தார். அவர் நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. அதன் பிறகு பைரவி திரைப்படம் தான் ரஜினி ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம்.

அதில் இருந்து தொடர்ந்து ஹீரோவாக யாரும் அசைக்க முடியாத ஒரு ஹீரோவாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் தனக்கும் ரஜினிக்கும் இடையேயான ஒரு நட்பை பற்றி கே எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்த ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.

அதாவது கே எஸ் ரவிக்குமாரிடம் ரஜினிகாந்த் ‘என்னுடைய அடுத்த படத்தை பாலச்சந்தர் தான் தயாரிக்கிறார். அவரிடம் போய் கதை சொல்லுங்கள்’ எனக் கூறினாராம். அப்போது பாலச்சந்தரிடம் முத்து கதையை சொல்லி இருக்கிறார் ரவிக்குமார்.

அந்த கதை அவருக்கு பிடித்துப் போக அதற்கு முன்பு ரஜினி ரவிக்குமாரிடம் ‘எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்’ என கேட்டாராம். அப்போது ரவிக்குமார் ’12 லட்சம் வரை வாங்குகிறேன்’ என கூறினாராம். நாட்டாமை பட சமயத்தில் 5 லட்சம் தான் வாங்கினாராம். இத்தனைக்கும் நாட்டாமை படம் ரவிக்குமாருக்கு பத்தாவது திரைப்படம். அப்படி இருக்கும்போதே ஐந்து லட்சம் தான் வாங்கினாராம்.

உடனே ரஜினி முத்து படத்திற்காக 15 லட்சம் என எழுதி கொடுத்து அனுப்பினாராம். பாலச்சந்தர் அதை வாங்கி பார்த்ததும் ‘என்னடா பதினைந்து லட்சம் என எழுயிருக்கு. என் காலத்துல இவ்வளவு சம்பளத்தை வாங்கினதே இல்லையே. ஒரு லட்சம், ரெண்டு லட்சம் அஞ்சு லட்சம் வரை தான் வாங்கி இருக்கிறேன். இது என்ன உனக்கு 15 லட்சம் எழுதி இருக்கான் ‘என ரஜினியை பற்றி பாலச்சந்தர் தன்னிடம் கேட்டதாக கேஎஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

6 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

7 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

8 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

9 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

9 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

16 hours ago