Categories: latest news

‘கூலி’ படத்தில் ரஜினி நடிக்க ஆசைப்பட்ட கேரக்டர்! லோகி அண்ணே இப்படி பண்ணிட்டீங்களே

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீசாக கூடிய திரைப்படம் கூலி. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் தான் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினி, நாகார்ஜுனா, அமீர்கான் ,உபேந்திரா என படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் கலந்து கொண்டு அவரவர் அனுபவங்களை பகிர்ந்தனர். அதில் ரஜினி பேசியது பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது .

அதுமட்டுமல்ல ரஜினி இந்த சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அதுவும் ஒரு சிறப்பாக கருதப்பட்டது. தற்போது படக்குழு ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று படத்தை பற்றி பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். அதில் நேற்று ஹைதராபாத்தில் லோகேஷ், நாகர்ஜுனா ஸ்ருதிஹாசன் என அனைவருமே படத்தை பற்றி பேசி இருந்தனர்.

அந்த விழாவில் ரஜினி ஒரு வீடியோவில் பேசி அதை led திரையில் ஒளிபரப்பினார்கள். அந்த வீடியோவில் ரஜினி நாகார்ஜுனாவை பற்றி மிகப் பெருமையாக பேசி இருந்தார். அதாவது இந்த படத்தில் சைமன் கேரக்டரில் நாகர்ஜூனா நடிக்கிறார். அதுதான் படத்திற்கு வில்லன் கேரக்டர் .அந்த கேரக்டரை பற்றி முதன் முதலில் லோகேஷ் ரஜினியிடம் தான் விவரித்தாராம்.

அதைக் கேட்டதும் ரஜினிக்கு இந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன் என கூறி இருக்கிறார் .பொதுவாக ரஜினிக்கு வில்லனாக நடிப்பது என்பது மிகவும் பிடிக்கும் .ஆனால் லோகேஷ் இந்த கேரக்டருக்கு நான் நாகர்ஜுனாவை மனதில் வைத்திருக்கிறேன் என சொல்லிவிட்டாராம். நாகர்ஜுனா என்ற பெயரை கேட்டதும் ரஜினிக்கு ஒரே அதிர்ச்சி. அவர் இதற்கு சம்மதிப்பாரா என கேட்டிருக்கிறார் ரஜினி .

இருந்தாலும் இந்த கேரக்டரை பற்றியும் படத்தின் கதையைப் பற்றியும் நாகார்ஜுனாவிடம் ஏழு முறை லோகேஷ் விவாதித்து இருக்கிறார் .கடைசியாக எப்படியோ நாகார்ஜுனா ஒப்புக்கொண்டாராம். படப்பிடிப்பில் நாகர்ஜுனாவிடம் ரஜினி ‘எப்படி இன்னும் இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்’ எனக் கேட்டு இருக்கிறார். அதற்கு நாகார்ஜுனா உடற்பயிற்சி, நீச்சல் ,சரியான உணவு முறை, அது மட்டுமல்ல என் அப்பாவிடம் இருந்து வந்த அந்த ஜீன் என கூறினாராம்.

nagarjuna

ரஜினியும் நாகார்ஜுனாவும் கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பின்பு மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்து நடிக்கின்றனர். இதைப் பற்றியும் ரஜினி பேசும்போது 33 வருடத்திற்கு பிறகு நானும் நாகர்ஜுனாவும் நடிக்கிறோம். அப்போது எப்படி இருந்தாரோ அதே மாதிரி தான் இப்போதும் நாகர்ஜுனாக இருக்கிறார் .ஆனால் எனக்கு முடியெல்லாம் கொட்டி போய்விட்டது. அவருக்கு அப்படியே தான் இருக்கிறது என கூறினார் ரஜினி.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

2 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

3 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

14 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

15 hours ago