Categories: latest news

படம்னா இப்படித்தான் இருக்கணும்!.. சமுத்திரக்கனி படத்தை ரஜினி இப்படி பாராட்டிட்டாரே!..

Rajinikanth: நடிகர் ரஜினி ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த ரசிகரும் கூட. ஒரு நல்ல ரசிகனே நல்ல கலைஞனாக உருவாக முடியும் என்பதற்கு ரஜினியே முக்கிய உதாரணம். பெரிய இயக்குனர், அறிமுக இயக்குனர், பெரிய நடிகர், அறிமுக நடிகர் என எந்த பாராபட்சமும் பார்க்க மாட்டார். அவருக்கு ஒரு படம் பிடித்தால் உடனே படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டுவார்.

இதை பல வருடங்களாக அவர் பின்பற்றி வருகிறார். நடிகனாவதற்கு முன்பே எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், நாகேஷ், எம்.ஆர்.ராதா, நம்பியார் என பலரையும் திரையில் ரசித்திருக்கிறார். இதை அவர் நடிக்கும் பல படங்களிலும் சொல்லியும் இருக்கிறார். குறிப்பாக கமலை மிகவும் ரசித்தவர் ரஜினி.

கமலின் அபூர்வ சகோதரர்கள் பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு கமல் வீட்டுக்கு போய் தூக்கத்திலிருந்து அவரை எழுப்பி பாராட்டிவிட்டு வந்தார். நாயகன் படத்தை பார்த்துவிட்டும் உடனே கமலுக்கு போன் செய்து பாராட்டினார். கமல் இயக்கி நடித்த ஹே ராம் படத்தை 40 முறைக்கும் மேல் பார்த்துவிட்டதாக சொல்லியிருந்தார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ஏதேனும் புதுப்படம் வெளியாகி பேசப்பட்டால் உடனே பார்த்துவிடும் பழக்கம் ரஜினிக்கு இருக்கிறது.

அமரன், நந்தன், வாழை என பல படங்களையும் பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார். அமரன் பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில்தன, நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் திரு.மாணிக்கம் படத்தையும் பாராட்டி ரஜினி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். ஒரு நல்ல திரைப்படத்தின் அடையாளம் அந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் சில நாட்கள் நம் நினைவில் இருக்க வேண்டும். அப்படததில் இருக்கும் ஒரு நல்ல விஷயத்தை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்க வேண்டும். அதை திரு.மாணிக்கம் படம் செய்திருக்கிறது என அவர் பாராட்டியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago