Categories: latest news

Rajini Vs Vijay: தம்பி வரலாம்!. விஜய் வரக்கூடாதா?.. ரஜினியின் அண்ணனுக்கு ஏன் இந்த வன்மம்?…

Vijay Tvk: நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இருக்கிறது. அதை துவங்கி வைத்தவர் அவர்தான். அவருக்கு பின் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வந்தார். காங்கிரஸ் கட்சியின் மீது ஆர்வமாக இருந்த சிவாஜியிம் கட்சி துவங்கினார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

அவர்களுக்கு பின் டி.ராஜேந்தர், பாக்கியராஜ், சரத்குமார் ஆகியோர் கட்சி துவங்கினார். நடிகர் கார்த்தி ஏற்கனவே இருந்த ஒரு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால், யாராலும் தேர்தலில் வெற்றியை பெறமுடியவில்லை. இதில், சரத்குமார் மட்டும் ஒரே ஒருமுறை எம்.பி.யாக இருந்தார்.

ஒருபக்கம், நடிகர் ரஜினி தனது திரைப்படங்களில் மறைமுகமாக அரசியல் பேசி வந்தார். ‘நான் எப்ப வருவேன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்’ என பேசி அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பாபா உள்ளிட்ட அவரின் பல படங்களிலும் அரசியல்ரீதியான வசனங்களை பேசினார்.

எனவே, தலைவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் நம்பி காத்திருந்தார்கள். 25 வருடங்கள் போக்கு காட்டிக்கொண்டிருந்த ரஜினி ஒரு நாள் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி.. ஆனால், தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என அறிவித்தார். ரஜினி ரசிகர்கள் ஃபயர் விட்டார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என எஸ்கேப் ஆனார் ரஜினி. அவருக்கு பின் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து மாநாட்டையும் நடத்தி முடித்து அதிர வைத்துவிட்டார். அதோடு, ஆளும் கட்சியையையும் சரமாரியாக விமர்சித்து பேசி அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டார்.

இந்நிலையில், ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா மதுரை மீனாட்ச்சி அம்மான் கோவிலிக்கு தரிசனம் செய்ய் வந்த போது விஜயின் அரசியல் வருகை பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘விஜய் வரட்டும். ஆனால், விஜயால் பெரிதாக செய்ய முடியாது. அவரால் முடியாது’ என கருத்து சொன்னார்.

இந்த விவகாரம் விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி அவரின் அண்ணனிடம் ஆசர்வாதம் வாங்கினார். அப்போது ‘கடவுள் அருளால் என் தம்பி வெற்றி பெறுவார். ரஜினி மக்களுக்கு நல்லது செய்வார்’ என செய்தியாளர்களிடம் சொன்னவர்தான் சத்தியநாராயணா. ஆனால், விஜயை பற்றி கேட்டால் ‘கஷ்டம். அவரால் ஒன்றும் செய்ய முடியாது’ என சொல்லி இருப்பது அவரின் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என பலரும் கூறி வருகின்றனர்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

10 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

10 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

18 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

19 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

20 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago