Categories: latest news

ஹிட் பட இயக்குனர்களுடன் படம் பண்ண காரணம் இதுதான்!.. ஜோசியம் பார்க்கும் ரஜினி!..

நடிகர் பல வருடங்களாகவே ஏற்கனவே தன்னை வைத்து படமெடுத்து ஹிட் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற சீனியர் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், எப்போது விஜய் அவரை வியாபாரத்திலும், சம்பளத்திலும் ஓவர் டேக் செய்தாரோ அதுமுதல் தன்னுடைய ரூட்டை மாற்றினார்.

கரண்ட் டிரெங்கில் ஹிட் கொடுக்கும் இளம் இயக்குனர்களை அழைத்து பேசினார். அவர்களிடம் தனக்காக கதை எழுத சொல்லி அதில் நடிக்க துவங்கினார். இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த சிறுத்தை சிவாவை அழைத்து தனக்காக ஒரு கதை பண்ண சொன்னார். அப்படி உருவான படம்தான் அண்ணாத்தே.

அதேபோல், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஹிட் கொடுத்த தேசிங்கு பெரியசாமி, டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி ஆகியோரை அழைத்து எனக்காக ஒரு கதை பண்ணுங்கள் என்றார். ஆனால், அந்த இரண்டு இயக்குனர்களின் கதைகளிலும் ரஜினி நடிக்கவில்லை. ரஜினிக்கு தேசிங்கு பெரியசாமி சொன்ன கதையில்தான் இப்போது சிம்பு நடிக்கவுள்ளார். மேலும், ப.ரஞ்சித்தை அழைத்து பேசி அவரின் இயக்கத்தில் கபாலி, காலா போன்ற படங்களில் நடித்தார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கட்த்தில் பேட்ட படத்தில் நடித்தார்.

அதேபோல், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சனை அழைத்து அவரின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். இந்த படம் ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்து 700 கோடி வரை வசூல் செய்து சாதனை செய்தது. சந்திரமுகி படத்திற்கு பின் இதுதான் ரஜினிக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

கமலை வைத்து விக்ரம் எனும் சூப்பர் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹிட் அடிக்கும் என சொல்லவே தேவையில்லை. லோகேஷின் ஸ்டைலில் பக்கா ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது. வருகிற ஆகஸ்டு 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இப்போது மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2-வில் நடித்து வருகிறார்.

கரண்ட் டிரெண்டிங்கில் ஹிட் கொடுக்கும் இளம் இயக்குனர்கள் ரஜினி கைகோர்க்க ஒரு காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு இயக்குனர் வெற்றியை கொடுத்தால் அவருக்கு நேரம் நன்றாக இருப்பதாக அர்த்தம். எனவே, அவரோ நாமும் சேர்ந்தால் நமது கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறிவிடும் என நினைப்பாராம் ரஜினி. இப்போது கூட ஹெ.வினோத் மற்றும் வீர தீர சூரன் பட இயக்குனர் அருண்குமார் ஆகியோர் அடுத்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.

ரஜினியின் சக்சஸ் பார்முலாவுக்கு பின்னால் இருக்கும் இதுதான் காரணம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

8 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

17 hours ago