Categories: latest news

அந்த 2 படம் இல்லனா விஜய் அரசியலுக்கே வந்திருக்க முடியாது!.. போட்டு தாக்கிய இயக்குனர்!..

TVK Vijay: கோலிவுட்டில் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் இவரை தளபதி என அழைக்கிறார்கள். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவுக்கு வந்தவர் இவர். துவக்கத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க படாத பாடு பட்டார். அதன்பின் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

கில்லி வெற்றி: கில்லி திரைப்படத்தின் மெகா வெற்றி இவரை வசூல் மன்னனாக மாற்றியது. ஒருகட்டத்தில் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியதுதான் இவரின் சாதனை. கோட் படத்திற்கு பின் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 69வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு பின் அவர் அரசியலில் தீவிரமாக களமிறங்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

அரசியலுக்கு வர காரணம்: விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பல வருடங்களாகவே அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை செய்து வந்தார். ஏனெனில், தன்னுடைய சில படங்கள் வெளியான நேரத்தில் அரசியல்ரீதியாக அவர் சந்தித்த நெருக்கடிகளும், பிரச்சனைகளுமே அவரை அரசியலுக்கு வரவைத்தது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை விட கோபத்தில் அரசியலுக்கு வந்தவர்தான் விஜய்.

பனையூர் அரசியல்வாதி: விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்தினார். அதில் விஜய் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் ஆளும் திமுகவுக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். ஆனால், அதன்பின் அரசியல்ரீதியாக அவரின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளானது. மழையால் மக்கள் பாதிக்கப்பட்டபோது நேரில் போகாமல் பாதிக்கப்பட்ட சிலரை தனது பனையூர் அலுவகத்திற்கு வரவைத்து நிவாரண உதவி கொடுத்தார். இதை பலரும் கிண்டலடிக்க ‘நான் நேரில் போனால் கூட்டம் கூடிவிடும்’ என அற்புதமான விளக்கத்தை கொடுத்து ட்ரோலில் சிக்கினார்.

பாட்டுதான் காரணம்: இந்நிலையில், தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த மனிதம் என்கிற படம் தொடர்பான விழாவில் பேசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் ‘சிவகாசி, திருப்பாச்சி படங்களில் இடம் பெற்ற பாடல்கள்தான் விஜயை மாஸ் ஹீரோவாக மாற்றியது. அந்த பாடல்கள் இல்லையென்றால் விஜய் அரசியலுக்கே வந்திருக்க முடியாது. விஜய் என் தம்பி மாதிரி. நான் இதை சொல்வதால் என் மீது அவர் கோபப்படமாட்டார்’ என பேசியிருக்கிறார். சிவகாசி படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

14 minutes ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

2 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

3 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

5 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

8 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

20 hours ago