Categories: latest news

பாட்டு பிடிக்கலன்னு சொன்ன இயக்குனர்!.. தூக்கி எறிந்த இளையராஜா.. வந்ததோ சூப்பர் ஹிட் மெலடி!..

Ilayaraja: இளையராஜாவுக்கு 80களில் துவங்கிய இசைப்பயணம் இன்னமும் நிற்கவில்லை. இன்னமும் மனதை மயக்கும் சூப்பர் மெலடி பாடல்களை கொடுத்து லைம் லைட்டில் இருக்கிறார். சினிமாவில் இசையமப்பது மட்டுமில்லாமல் இசை நிகழ்ச்சி நடத்துவது, சிம்பொனி இசையமைப்பது என ஆக்டிவாக இருக்கிறார்.

சினிமா இசையை பொறுத்தவரை படத்தில் என்ன மாதிரியான சூழ்நிலையில் பாடல் வருகிறது என இயக்குனர் இளையராஜாவிடம் சொல்லுவார். இளையராஜா அதற்கு ஒரு டியூனை போட்டு காட்டுவார். அந்த டியூன் இயக்குனருக்கு பிடித்திருந்தால் அது பாடலாக மாறும். சில சமயம் இயக்குனருக்கு குழப்பம் இருந்தாலும் இளையராஜாவே அதை தீர்த்தும் வைப்பார்.

அவதாரம் : நாசர் அவதாரம் என்கிற படத்தை இயக்கி நடித்தபோது ஒரு பாடலுக்காக இளையராஜாவிடம் போனார். இளையராஜா டியூனை வாசித்து காட்டியதும் நாசருக்கு அது பிடிக்கவில்லை. இதை இளையராஜாவிடம் சொல்ல அவர் சிரித்துக்கொண்டே ‘இது நல்ல ட்யூன். சரியா வரும். நீ போய்ட்டு அப்புறம் வா’ என சொல்லி அனுப்பிவிட்டார்.

நாசர் திரும்பி வந்தபோது முழு இசைக்கோர்வோடு அந்த பாடலை கேட்டபோது மிரண்டு போய்விட்டாராம். அதுதான் ‘தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல’ பாடலாகும். இப்படி பல இயக்குனர்களும் நடந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் சின்னக்கவுண்டர், எஜமான், சிங்காரவேலன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் ஆர்.வி.உதயகுமார்.

சின்னக்கவுண்டர்: இவரின் படங்களில் பாடல்கள் அற்புதமான மெலடிகளாக அமைந்திருக்கும் அதேபோல், இவர் இயக்கும் படங்களில் பாடல்களை அவரே எழுதிவிடுவார். ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘சின்னக்கவுண்ட படம் உருவானபோது இளையராஜா ஒரு டியூன் போட்டிருந்தார். நான் ரெக்கார்டிங் தியேட்டருக்கு போன போது அதை வாசித்து காட்டினார். எனக்கு அது பிடிக்கவில்லை என அவரிடம் சொன்னேன். கோபத்தில் கையில் நோட்ஸ் எழுதி வைத்திருந்த பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு ‘ஏன் பிடிக்கல?’ என கேட்டார்.

‘சார். நீங்க மணிரத்னம் படத்துக்கு ஏத்த மாதிரி டியூன் போட்டிருக்கீங்க. இது கிராமத்து படம் எனக்கு முத்துமணி, கண்ணுமணி இப்படி பாட்டு வேண்டும்’ என்றேன். உடனே ஆர்மோனியத்தில் ஒரு டியூன் போட்டார். அவர் வாசிக்க வாசிக்க நான் பாடல் வரிகளை எழுதினேன். அதுதான் ‘முத்துமணி மாலை’ பாடல். 5 நிமிடத்தில் உருவான பாடல் அது’ என சொல்லி ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் ஆர்.வி.உதயகுமார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

49 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

14 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

16 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

22 hours ago