Categories: latest news

விஜயின் மாநாடு குறித்த கேள்விக்கு டென்ஷனான எஸ்.ஏ.சி! அப்படி என்ன கேட்டாங்க

விஜயின் அரசியல் பிரவேசம் ஒரு பக்கம் சூடு பிடித்து வருகிறது. தன்னுடைய அரசியலை நிலைநிறுத்த என்ன மாதிரியான முன்னெடுப்புகளை எல்லாம் செய்ய வேண்டும் என ஒவ்வொன்றாக விஜய் யோசித்து வருகிறார். அதில் முதல் கட்டமாக ரஜினி ரசிகர்களை காக்கா பிடித்து விட்டால் அது ஒரு பெரிய பலம் என நினைக்கிறார்.

அதனால் கூடிய சீக்கிரம் அவர் ரஜினியை போய் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவருடைய நெனப்பில் மண்ணள்ளி போடும் விதமாக விஜய் ரசிகர்கள் ரஜினியின் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதில் கோபமான ரஜினி ரசிகர்கள் விஜயை கடுமையாக எச்சரித்து வருகிறார்கள். தன்னுடைய ரசிகர்களை விஜய் கட்டுப்படுத்தாவிட்டால் அதன் பலனை அரசியல் களத்தில் அவர் சந்திப்பார் என அவருக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்படி அவருடைய ரசிகர்களாலேயே விஜயின் அரசியலுக்கு பெரிய ஆபத்து வரும் என்று தெரிகிறது. இன்னொரு பக்கம் இளைஞர்கள் விஜய் பக்கம் போவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. என்ன இருந்தாலும் தேர்தல் நேரத்தில் தான் எதையும் சொல்ல முடியும்.

கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய கட்சியின் கொடியையும் சின்னத்தையும் அறிவித்த விஜய் இதுவரை அவருடைய அரசியல் கொள்கை என்ன என்பதை கூறவில்லை. அதை தன்னுடைய முதல் மாநாட்டில் கூறுவதாக தெரிவித்திருந்தார். விஜயின் தவெக மாநாடு விக்கிரவாண்டியில் இந்த மாதம் 27ஆம் தேதி நடைபெறப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

அதன் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு உங்களுடைய ஆலோசனை அறிவுரை ஏதேனும் இருக்கிறதா என விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகரிடம் சமீபத்தில் பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

அதற்கு கோபமான எஸ்.கே சந்திரசேகர் ‘இப்போ எதுக்கு இங்க வந்திருக்கோம்? கலை சம்பந்தமாக வந்திருக்கோம். அது சம்பந்தமான கேள்விகளை மட்டும் தான் கேட்கணும். மற்ற கேள்விகளை எல்லாம் விட்டு விடுங்கள்’ என கூறினார்.

ஆனால் விடாமல் கேட்ட நிருபர் மீண்டும் விஜய் பற்றியே கேள்வியையே கேட்டார். இதில் கடுப்பான எஸ் ஏ சந்திரசேகர் ‘இப்போ என்ன உங்களுக்கு? நான் யாரையாவது திட்டனும். உங்களுக்கு கண்டன்ட் வேணும். அவ்வளவு தானே?

எந்த இடத்தில என்ன கேள்வி கேட்கணும் அப்படிங்கிற ஒரு வரைமுறை பத்திரிகையாளர்களுக்கு இருக்கு. அதுதான் பத்திரிகை தர்மம் .உங்களுக்கு நான் அட்வைஸ் கொடுக்கிற இடத்துல இருக்கிறேனு நினைக்கிறேன். என் பிள்ளயா நினைச்சு சொல்றேன். எந்த இடத்துல என்ன கேள்வி கேட்கணுமோ அதை மட்டும் கேளுங்க’ என கூறினார் எஸ் ஏ சந்திரசேகர்.

ராம் சுதன்

Recent Posts

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

4 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

5 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

5 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

5 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

8 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

9 hours ago