Categories: latest news

கதையே கேட்க டைம் இல்ல.. இவர வச்சு படம் பண்ண மாட்டேன்! எஸ்.ஏ.சி சொன்ன நடிகர்

தமிழ் சினிமாவில் புரட்சிகரமான தன்னுடைய கருத்துக்களாலும் வசனங்களாலும் தனி முத்திரையை பதித்தவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். 70-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அதில் 17 படங்கள் விஜயகாந்த் வைத்து மட்டும் எடுத்து இருக்கிறார் .விஜயகாந்த் கெரியரில் மிக முக்கிய பங்கு வகித்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் எடுத்த அத்தனை படங்களும் விஜயகாந்துக்கு ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதனாலயே விஜயகாந்த் எஸ்ஏ சந்திரசேகரை கடைசிவரை தன் குருவாக மிகவும் பயபக்தியுடன் அவருக்கு மரியாதை கொடுத்து வந்தார். அதனால் தான் செந்தூரப்பாண்டி படத்தில் சம்பளமே வாங்காமல் கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார் விஜய். தனக்கு செய்த உதவியை எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும் மறக்க மாட்டார் விஜயகாந்த். இந்த நிலையில் sac ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.

சட்டம் என் கையில், நெஞ்சிலே துணிவிருந்தால் ஆகிய படங்கள் கொடுத்த பிறகு எஸ்ஏசி மார்க்கெட் உயர தொடங்கியது. நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தை 22 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார் .இந்த இரண்டு படங்கள் ஹிட்டானதும் அவருக்கு மற்ற மொழிகளில் வாய்ப்புகள் தேடி வந்திருக்கிறது. தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பிசியாக போய்விட்டார் எஸ் ஏ சி.

இந்த இடைவெளியில் விஜய்காந்தும் மற்ற மற்ற படங்களில் நடிக்க அவருக்கு சரியான வெற்றி கிடைக்கவில்லை. அதனால் அவருடைய மார்க்கெட் குறைய தொடங்கியிருக்கிறது .தெலுங்கில் எஸ்ஏசி ஒரு படம் எடுக்க அது ஹிட்டாக அந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என பி எஸ் வீரப்பன் சொல்லி இருக்கிறார். அப்போ இந்த படத்தில் விஜயகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என எஸ் ஏ சி சொல்ல பி எஸ் வீரப்பன் அதற்கு அவருடைய மார்க்கெட் முன்பு மாதிரி இல்லை என ஒரு பிரபல ஹீரோவிடம் அனுப்பி இருக்கிறார் பி எஸ் வீரப்பன்.

vjiayakanth

எஸ்ஏசி அவர் வீட்டுக்கு போக அந்த நேரத்தில் அந்த ஹீரோ வேறொரு படப்பிடிப்பிற்காக சென்று விட்டாராம் .அதனால் நாளை கதை கேட்கிறேன் என சொல்லி இருக்கிறார். இதை பி எஸ் வீரப்பனிடம் கதை கேட்க நேரமில்லாத ஒரு நடிகருடன் என்னால் பணியாற்ற முடியாது என சொல்லி இந்த படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்கிறேன். எனக்கும் சம்பளம் வேண்டாம் .விஜயகாந்துக்கும் சம்பளம் வேண்டாம் .பத்தாயிரம் கொடுத்தால் போதும் என சம்பளமே வாங்காமல் இந்த படத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள். அந்த படமும் பெரிய அளவு ஹிட் ஆகியிருக்கிறது. இதை ஒரு பேட்டியில் எஸ்ஏசி பகிர்ந்திருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

45 minutes ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

2 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

3 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

16 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

16 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

21 hours ago