Categories: latest news

சோஷியல் மீடியா ஓப்பன் டாய்லெட் மாதிரி ஆயிடுச்சி!.. கொந்தளித்த சமுத்திரக்கனி!…

தமிழ் சினிமாவில் நல்ல கருத்துள்ள, சமூகத்தின் அவலங்களை தோலுறுத்திக் காட்டுவது போலவும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அறிவுரை சொல்வது போலவும் சிறந்த படங்களை இயக்கி வந்தவர் சமுத்திரக்கனி. சசிக்குமாரின் நெருங்கிய நண்பரான இவர் சசியை வைத்து இயக்கிய நாடோடிகள், போராளி போன்ற படங்கள் பேசப்பட்டது.

மேலும், சமுத்திரக்கனி இயக்கி நடித்த அப்பா போன்ற படங்கள் ஒரு அப்பா எப்படி இருக்க வேண்டும் என்பதை எல்லோருக்கும் காட்டியது. எந்த படத்தில் நடித்தாலும் எல்லோருக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டே இருப்பார் சமுத்திரக்கனி. ஒருகட்டத்தில் இது ரசிகர்களுக்கு போரடித்துவிட்டது. எனவே, அவர் நடித்த படங்கள் தியேட்டர்களில் ஓடவில்லை. அதோடு, அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு தியேட்டர்கள் கூட கிடைப்பது இல்லை. அதோடு இவரை பூமர் என ஒதுக்கிவிட்டார்கள். எனவே, ‘போங்காடா’ என சொல்லிவிட்டு சினிமாவில் நடிக்கப்போய்விட்டார்.

இப்போது தமிழ், தெலுங்கில் முக்கிய நடிகராக மாறிவிட்டார். குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் கலக்கி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகும் பெரிய படங்களிலும் சமுத்திரக்கனி இருக்கிறார். ராஜமவுலி, ஷங்கர் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சமுத்திரக்கனி மக்கள் சமூகவலைத்தளங்களில் மூழ்கி கிடப்பது பற்றி பேசியிருக்கிறார். கொஞ்ச நாளாகவே போன் இல்லாமல் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கு. நான் காலையில் அரை மணி நேரம் போன் பார்ப்பேன். அதுகூட யாரிடமாவது பேசுவதற்காக மட்டுமே. அடுத்து மாலை அதேபோல் அரைமணி நேரம் போனை பயன்படுத்துவேன்.

அதுவும் முக்கியமான விஷயங்கள் பேச மட்டுமே. இல்லன்னா போனை எடுக்கவே மாட்டேன். சோசியல் மீடிய இப்போது திறந்தவெளி கழிப்பறை மாதிரி ஆயிடுச்சு. எல்லாவரும் வந்து அங்கே குப்பையை கொட்டிவிட்டு போகிறார்கள். அதை பலரும் மண்டையில் ஏற்றி கிறுக்கு பிடித்தவர் போல் மாறிவிடுகிறார்கள்.

சோசியல் மீடியாவில் நம்மை சீர்படுத்தும் விஷயங்கள் 10 சதவீதம் மட்டுமே இருக்கிறது. 90 சதவீதம் நம்மை சீரழிக்கும் விஷயங்களே இருக்கிறது’ என பொங்கியிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

4 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

5 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

7 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago