Connect with us

சந்தானம் பெரிய கடனாளியானதுக்கு அந்த பிரபலம் தான் காரணமா? தயாரிப்பாளர் சொன்ன தகவல்

latest news

சந்தானம் பெரிய கடனாளியானதுக்கு அந்த பிரபலம் தான் காரணமா? தயாரிப்பாளர் சொன்ன தகவல்

சந்தானம் பெரிய கடனாளியானதுக்கு ஒரு பிரபலமான ஹீரோ தான் காரணம்னு பேசப்படுகிறது. இதுகுறித்து சினிமா விமர்சகரும் தயாரிப்பாளருமான ஆஸ்கர் மூவீஸ் பாலாஜி பிரபு என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

சினிமா தயாரிச்சாங்கன்னா பீதியிலேயே இருக்க வேண்டியதுதான். இன்னைக்கு அப்படித்தான் தயாரிப்பாளர்களோட நிலைமை இருக்கு. சந்தானம், ஆர்யா இரண்டு பேருமே படங்கள் தயாரிக்கிறாங்க. நிறைய நஷ்டப்படுறாங்க. சந்தானம் பெரிய அளவில் கடனாளியானதுக்குக் காரணம் சிவகார்த்திகேயன் தான்.

சந்தானம் ஆரம்பத்துல லொள்ளு சபாவுல இருந்தாரு. அவரோட டைமிங் காமெடி சூப்பரா இருக்கும். லொள்ளு சபாவுல பெரிய அளவில் பேரு எடுக்குறாரு. சிம்பு இதைப் பார்த்து ரசிக்கிறாரு. சந்தானத்தைத் தன்னோட மன்மதன் படத்துல நடிக்க வைக்கிறாரு. காமெடி கொஞ்சமா தான் இருக்கும். ஆனா நல்ல பேரு வாங்கிடுறாரு.

இந்த காலகட்டத்தில் அது இது எதுன்னு காமெடி ஷோ பண்றாரு. அவரோட காமெடியும் பிரமாதமா போய்ச் சேருது. அந்த வகையில தனுஷ் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்துறாரு. நெல்சன் விஜய் டிவியில ஷோ டைரக்டரா இருக்குறாரு. அப்போ சிவகார்த்திகேயனுக்கும், நெல்சனுக்கும் நட்பு உண்டாகுது.

அந்த சமயத்துல சிம்பு நடிக்கும் வேட்டை மன்னன் படத்தை நெல்சன் இயக்குறாரு. அது வரல. அந்தப் படம் டிராப் ஆச்சு. அந்தப் படத்துல ஒர்க் பண்ணும்போது சிவகார்த்திகேயனை என்னோட படத்துல அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணச் சொல்றாரு நெல்சன். படம் டிராப் ஆனது. இருவரும் திரும்பவும் பழையபடி அவங்கவங்க வேலைக்குப் போயிடுறாங்க.

இந்தக் காலத்தில் சிவகார்த்திகேயனைத் தனுஷ் பார்த்துக் கூப்பிடுறாரு. 3 படத்துல நடிக்க வைக்கிறாரு. அதுல அவரது நடிப்பு ரசிக்கிற மாதிரி இருந்தது. நல்ல வரவேற்பு கிடைச்சது. அந்த நேரத்துல சந்தானம் ஓகே ஓகே, பாஸ் என்ற பாஸ்கரன்னு பெரிய லெவல்ல காமெடியனா வளர்ந்துடறாரு சந்தானம். காமெடி கிங்னு சொல்றாங்க.

அதே நேரத்துல தனுஷ் நட்பின் அடிப்படையில் சிவகார்த்திகேயனை ஹீரோவா அறிமுகப்படுத்துறேன்னு சொல்றாரு. அதுதான் எதிர்நீச்சல். சிவகார்த்திகேயன் காமெடி படங்களில் ஹீரோவா நடிக்கிறாரு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி எல்லாமே ஹிட் ஆகுது. அந்த நேரத்துல காமெடி நடிகராகவே சந்தானம் நடிக்க அவருக்கும் ஹிட் ஆகுது. அப்போ நம்ம ஏன் காமெடி நடிகரா நடிக்கணும்? நம்மோட கூட ஒர்க் பண்ணுன சிவகார்த்திகேயன் ஹீரோவா நடிச்சி பெரிய ஆளா ஆகிட்டாரு. அதனால சந்தானம் காமெடியனில் இருந்து ஹீரோவா மாறினாரு.

அவருக்கும் சில படங்கள் பிக்கப் ஆனது. ஆனால் தொடர்ந்து பெரிய ஹிட்டாகவில்லை. சிவகார்த்திகேயனுக்கு பெரிய பெரிய ஹீரோயின், தயாரிப்பாளர்கள்னு கிடைச்சாங்க. பிக்கப் ஆனாரு. ஆனால் சந்தானம் தில்லுக்குத் துட்டுன்னு ஒரு சில படங்கள் ஹிட் ஆனது. சொந்தப்படம் எடுத்து டோட்டலாவே கடனாளியானாரு. சிவகார்த்திகேயனும் சொந்தப் படம் எடுத்து கடனாளியாகிடுறாரு.

கடனை அடைக்க படங்கள் நடிச்சாரு. அமரன் படம் வந்ததுக்கு அப்புறம் கடன் இல்லாம இருக்காரு. இப்போ அவரு பராசக்தி படம் ரிலீஸ் ஆகப்போகுது. அவரு வேற ஒரு உச்சத்தைத் தொட்டுட்டாரு. ஆனா சந்தானத்துக்கு தொடர்ந்து தோல்விப்படங்களாகவே அமையுது. அதனால திரும்ப காமெடியனா நடிக்க வாய்ப்பு கிடைச்சும் மறுக்குறாரு. அவரு ஹீரோவா ஆகிட்டோம். இனி நாம திரும்ப காமெடியனா நடிக்கணுமான்னு பிடிவாதம் பிடிக்கிறாரு.

இந்த நிலையில 12 வருஷம் கழிச்சி மதகஜராஜா படம் வருது. அது நல்ல ஹிட்டாகுது. அப்போ எல்லாரும் காமெடியனா நடிங்க. அதுதான் எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்றாங்க. இந்த நேரத்துல சிம்பு 49 படத்துல சந்தானத்தை நடிக்கக் கூப்பிடுறாரு. சந்தானத்தை ஏற்கனவே மன்மதன்ல அறிமுகப்படுத்தியவரு அவர்தான். அதனால சந்தானம் சிம்புவை காட் ஃபாதரா நினைக்கிறாரு. அதனால ஓகே சொல்லிடுறாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top