Categories: latest news

விமான சாகச நிகழ்வுல யாரைக் கைது செஞ்சோம்..? சரத்குமார் காட்டம்

அல்லு அர்ஜூன் கைதானதும், மோகன்பாபு பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தி சர்ச்சை ஆனதும் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள். இரண்டுமே பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் இருவருக்கும் ஆதரவாகத் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா…

ஒரு விழாவுக்குக் கூட்டம் வருதுன்னா அது முதல்ல போலீஸ்சுக்குத் தெரிஞ்சிருக்கும். அன்பு சகோதரி தமிழிசை சொல்லிருக்காங்க. அதே தான் என்னோட நோக்கம். இவ்ளோ கூட்டம் வருதுன்னா தியேட்டர் ஓனர் அல்லு அர்ஜூன் தியேட்டருக்கு வர்றாருன்னு சொல்லிருப்பாங்க.

வரும்போது போலீஸ் பந்தோபஸ்து கேட்டுருப்பாங்க. கட்டுக்கடங்காத கூட்டம் வரும்னு தெரிஞ்சா ஐயோ எங்களால பந்தோபஸ்து வழங்க முடியாது. நீங்க வராம இருக்குறது நல்லதுன்னு சொல்லிருக்க வேண்டும். வந்தபிறகு சொல்லும்போது அவர்தான் அதுக்குக் குற்றவாளின்னு கைது செய்வது எந்த வகையில் நியாயம் என்று கேட்கின்றேன்.

அங்கே விமானப்படையின் வீரதீர சாகசங்கள் நடக்கும்போது 5 பேர் செத்தாங்க. யாரைக் கைது பண்ணுனீங்க. ஏர் மார்ஷலையா? அதுக்கு நாம் பாதுகாப்பு வழங்கி இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் உரிய நேரத்தில் சொல்லவில்லையோ. நான் யார் மீதும் குற்றம் சாட்டவில்லை. அது தேவையா என்பது எனக்கு புரியவில்லை.

அதே போல மோகன்பாபு பத்திரிகை சகோதரர்களை அடித்தார் என்று சொல்கிறார்கள். எனக்கு அவரை பல ஆண்டுகளாகத் தெரியும். என்னன்னா அவருக்கும் அவரு மகனுக்கும் இடையே உள்ள பிரச்சனை. அதுல அவங்க மகனுக்கு வீட்டுக்குள்ள போகறதுக்கு உரிமை இருக்கு.

ஆனா கதவைத் தள்ளிக்கொண்டு அவர் போகும்போது பத்திரிகை சகோதரர்களும் உள்ளே போயிட்டீங்க. ஓகே. ஆனா மோகன்பாபுவுக்கு யாராவது வந்தால் எப்படி தெரியும்?

அதனால தன்னைப் பாதுகாப்பதற்கு அப்படி பண்ணிருக்கலாம். உள்ளே போனதே தப்பு தானே. வெளியே வந்து அப்படி பண்ணிருந்தா குற்றம் சொல்லிருக்கலாம். அதனால அங்கிருக்குற கமிஷனர் அவர்கள் பார்த்து நிதானமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மோகன்பாபு பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

sankaran v

Recent Posts

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

1 hour ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

7 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

8 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

8 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

8 hours ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

11 hours ago