சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் தயாராகி வருகின்றது. இது வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமா இருக்குமோ என்ற கேள்விதான் இப்போது அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. ஆனால் வடசென்னை இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் தனுஷை வைத்துதான் எடுப்பார் என்று கோலிவுட்டில் திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். ஆனால் சிம்புவை வைத்து எடுக்கும் படம் வடசென்னை படத்தின் சாயல் போல இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
அதனால் தனுஷிடம் என்.ஓ.சி வாங்க வெற்றிமாறன் தனுஷை சந்திப்பதற்காக மும்பை செல்ல இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஏனெனில் தனுஷ் ஹிந்தியில் படத்தில் பிஸியாக இருப்பதால் மும்பையில் இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இன்று வலைப்பேச்சில் இந்த விஷயத்தை பற்றி கூறும் போது தனுஷ் என். ஓ.சி கொடுக்க சரி என்று சொல்லிவிட்டார்.
அதே சமயம் வெற்றிமாறனிடம் ‘ நீங்க என்ன வேண்டுமானாலும் வடசென்னையில் இருந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் உங்க ப்ரொடியூசர்கிட்ட சொல்லி நம்ம அக்கவுண்டுக்கு ஒரு 20 கோடி அனுப்பி வைக்க சொல்லுங்கள்’ என சொன்னதாக வலைப்பேச்சில் இன்று பேசியிருக்கிறார்கள். உடனே கடுப்பான வெற்றிமாறன் சிம்புவை வைத்து எடுப்பதாக இருந்த அந்த கதையில் இப்போது மாற்றம் செய்து வருவதாக கூறுகிறார்கள்.
இது ஒரு பக்கம் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும் தனுஷ் தரப்பில் விசாரிக்கும் போது வெற்றிமாறன் எங்கு கையெழுத்து போட சொன்னாலும் தனுஷ் கையெழுத்துபோட தயாராகத்தான் இருக்கிறாராம். இதை தனுஷ் அவரது மேலாளரிடமே சொல்லிவிட்டாராம். அதுவும் போக இப்படி ஒரு சந்திப்பு நடந்த மாதிரியே தனுஷ் தரப்பில் சொல்லவில்லையாம்.
என்ன இருந்தாலும் படம் வரும் போது தெரிந்துவிடும். கதையில் மாற்றம் இருந்தால் தனுஷ் 20கோடி கேட்டார் என்று வைத்துக் கொள்ளலாம். அதே கதைதான் என்றால் தனுஷ் தரப்பில் 20கோடி கேட்கவில்லை என்று வைத்துக் கொள்ளலாம் என வலைப்பேச்சில் இன்று பேசியிருக்கிறார்கள் .
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…