பொதுவாக நடிகர்கள் ஒரு படத்தை நடிக்க ஒப்புக்கொண்டால் சம்பளம் பேசி ஷூட்டிங் முடிந்து படம் வெளியாகும். ஒருவேளை படம் பாதியில் டிராப் ஆனாலோ அல்லது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனாலோ அதற்கு கண்டிப்பாக அப்படத்தின் ஹீரோ காரணமாக இருக்க மாட்டார். ஆனால் சிம்பு இதற்கு விதி விலக்கு.
இவர் நடிப்பில் துவங்கப்படும் படங்களுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் அதற்கு சிம்பு மட்டுமே காரணமாக இருப்பார். AAA, மாநாடு போல இவர் நடிப்பில் உருவான பல படங்கள் பல பஞ்சாயத்துகளை பார்த்திருக்கிறது. இப்போது இதே பிரச்சனை வெற்றிமாறன் படத்திற்கும் வந்திருக்கிறது.
கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்க சிம்பு நடிக்க புதிய திரைப்படம் ஒரு மாதத்திற்கு முன்பு துவங்கியது. வடசென்னை படத்தின் கிளைக்கதையாக இப்படம் உருவானது. வேகவேகமாக பிராமோஷன் ஷுட் எல்லாம் நடந்தது. சிம்புவும் அதில் கலந்துகொண்ட புகைப்படங்கள் கூட வெளியானது.
ஆனால், தற்போது படத்தை பற்றி எந்த அப்டேட்டும் இல்லை. ஷுட்டிங்கும் நடக்கவில்லை. மேலும் புரமோ ஷுட் வீடியோவும் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படமும் சிக்கலை சந்தித்திருக்கிறது. படம் துவங்கியபோது 10 கோடியை மட்டும் அட்வான்ஸாக வாங்கிக்கொண்டு மீதியை படத்தின் வசூலில் குறிப்பிட்ட சதவீதத்தை வாங்கிக் கொள்கிறேன் என சிம்பு பேசியிருந்தார்.
இப்போது திடீரென தனக்கு 30 கோடி அட்வான்ஸாக வேண்டும் எனக் கேட்டதால் தாணு ஜெர்க் ஆகி விட்டாராம். அதோடு வெற்றிமாறனும் சம்பளத்தை சேர்த்து கேட்டதால்தான் படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் நிற்பதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…