Categories: latest news

பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலை முயற்சி!.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!…

Singer kalpana: 5 வயது முதல் பாடி வரும் பாடகி கல்பனா ராகவேந்தர். 2013ம் வருடத்திற்குள்ளே 1500 பாடல்களை பாடி முடித்திருந்தார். மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளில் பாடியிருக்கிறார். தமிழகம், இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று இசைக்கச்சேரிகளில் பாடியிருக்கிறார்.

விஜய் டிவியில் பாட்டு பாடுவது தொடர்பான பல நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்துகொண்டார். ஸ்டார் சிங்கர் 5வது சீசனில் வீன்னராக இருந்தார். அதன்பின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிகள் ஜட்ஜாகவும் கலந்துகொண்டார். தமிழ் மட்டுமின்றை தெலுங்கு தொலைக்காட்சிகளிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருந்திருக்கிறார். இவரின் குடும்பமே இசைக் குடும்பம்தான். இவரின் அப்பா ராகவேந்தர் பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

சிறு வயது முதலே கர்நாடக சங்கீதத்தையும் கல்பனா முறையாக கற்றுக்கொண்டார். சிறுமியாக இருந்த போது புன்னகை மன்னன் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்தும் இருக்கிறார். சினிமாவில் என் ராசாவின் மனசிலே படத்தில்தான் முதன் முதலில் பாட துவங்கினார். அதன்பின் பல படங்களிலும் பாடியிருக்கிறார்.

மாமன்னன் படத்தில் வந்த கொடி பறக்கு காலம் பாடல் கூட இவர் பாடியதுதான். தமிழ் மட்டுமின்றி பல தெலுங்கு பாடல்களையும் பாடியிருக்கிறார். இந்நிலையில்தான், ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 2 நாட்களாக அவரின் வீடு உட்புறம் பூட்டப்பட்டிருந்தது. அவரின் செல்போன் எண்ணிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, உறவினர்கள் காவல் நிலையத்தில் சொல்ல அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா மயங்கி கிடந்தது தெரிய வந்திருக்கிறது.

எனவே, கல்பனா இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் கணவர் சென்னையில் இருக்கும் நிலையில், அவரை தொடர்பு கொள்ள போலீசார் முயற்சி செய்து வருகிறார்கள்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago