சாய் பல்லவி என் ஹீரோயின்.. அமரன் பார்த்து குஷ்பூ சொன்ன விஷயம்.. நெகிழ்ச்சியாக பேசிய எஸ்கே..!

by ramya suresh |
சாய் பல்லவி என் ஹீரோயின்.. அமரன் பார்த்து குஷ்பூ சொன்ன விஷயம்.. நெகிழ்ச்சியாக பேசிய எஸ்கே..!
X

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் டிவி நிகழ்ச்சிகள் மூலமாக தமிழ் சினிமா பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி கதாநாயகனாக மாறி இருக்கின்றார். தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அமரன் திரைப்படம்: நடிகர் சிவகார்த்திகேயனின் 22 ஆவது படமாக உருவான திரைப்படம் அமரன். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. மேலும் இந்த திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக கமலஹாசன் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்கள்.

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த காரணத்தால் படம் பாக்ஸ் ஆபிஸில் 360 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் முக்கிய படமாக அமைந்திருக்கின்றது. தற்போது வரை சிவகார்த்திகேயன் நடித்த எந்த திரைப்படமும் இந்த அளவுக்கு வசூலை செய்ததில்லை.

டாப்புக்கு சென்ற எஸ்கே: அமரன் திரைப்படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து பெரிய பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

பராசக்தி திரைப்படம் அமரன் திரைப்படத்தைப் போல ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமரன் 100வது நாள் விழா: கமல்ஹாசன் அவர்கள் அமெரிக்காவுக்கு சென்று தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கலைவாணர் அரங்கில் அமரன் திரைப்படத்தின் 100வது நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு படத்தில் நடித்திருந்த நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் மெடல் வழங்கி கௌரவம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோவானது தற்போது வைரலாகி வருகின்றது. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ' ஒரு படத்தில் நடிகைக்கு ஸ்பேஸ் கொடுத்து நடிக்கின்றோம் என்பது கிடையாது. இந்த படத்தில் நான் ஸ்கோர் செய்கின்றேனா? அல்லது சாய் பல்லவி ஸ்கோர் செய்கின்றாரா? என்பதை நான் ஒரு நாளும் பார்த்ததில்லை.

அப்படி நீங்கள் ஸ்கோர் செய்திருந்தாலும் என் ஹீரோயின் ஸ்கோர் செய்கின்றார். இப்படி மட்டுமே தான் நான் நினைப்பேன். ஒருமுறை குஷ்பூ அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய பெரிய ஹீரோயிசம் எது தெரியுமா? நீங்கள் இல்லாமல் 10 நிமிடம் படத்தின் காட்சிகளை சாய்பல்லவி எடுத்துச் சென்ற போது அதற்கு நீங்கள் அனுமதி வழங்கி இருந்தீர்கள் அதுதான் என்று கூறியிருந்தார். நான் அதற்கு அனுமதி எல்லாம் வழங்கவில்லை, அவர் என் ஹீரோயின். நான் இல்லை என்றாலும் அவர் சிறப்பாக நடித்திருந்தால் அது எனக்கும் தான் பெருமை' என்று பேசியிருந்தார்.

Next Story