Categories: latest news

என்னை முதலில் நம்பியது அவர்தான்!.. அவர் மட்டும் இல்லன்னா!.. உருகிய எஸ்.கே!…

Sivakarthikeyan: விஜய் டிவில் விஜே-வாக வேலை பார்த்தவர் சிவகார்த்திகேயன். அதற்கு முன் இசைக்கச்சேரிகளில் மிமிக்ரி கலைஞராக வலம் வந்தார். இவரின் அப்பா திருச்சியில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே எஸ்.கே.வின் அப்பா இறந்துவிட நாமும் அப்பாவை போல போலீஸ் அதிகாரியாக வேண்டும் என ஆசைப்பட்டார்.

ஆனால், அவரின் அம்மா அதை அனுமதிக்கவில்லை. எனவேதான் மிமிக்ரி பக்கம் போனார். அதன்பின் விஜய் டிவியில் வேலை கிடைத்தது. சில வருடங்கள் அப்படி வேலை செய்தார். அப்போதே சினிமாவில் நுழையவேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு இருந்தது. மெல்ல மெல்ல வாய்ப்பு தேடினார். இதற்கிடையில் அவருக்கு திருமணமும் ஆகிவிட்டது.

பொதுவாக திருமணமாகிவிட்டால் பலரின் கனவுகளும், ஆசைகளும் கலைந்து போய்விடும். ஏனெனில், குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஏதேனும் ஒரு வேலையோ அல்லது தொழிலையே செய்ய வேண்டி வரும். ஆனால், சிவகார்த்திகேயனை அதை எப்படியே சமாளித்தார்.

தனுஷ் நடித்த 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். அதன்பின் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் மூலம் டேக் ஆப் ஆனார். இப்போது 70 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டியிருக்கிறது.

இந்நிலையில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் நடித்துள்ள ‘நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு பேசும்போது ‘மாமனார் என்பது எல்லோருக்கும் முக்கியமான உறவு. ஆகாஷுக்கு பிரிட்டோ சார் போன்ற ஒரு நல்ல மாமனார் அமைந்திருக்கிறார். எனக்கெல்லாம் யாரும் பெண் கொடுக்கவே மாட்டார்கள். ஏனெனில், திருமணம் செய்தபோது நான் ஒரு நல்ல வேலையில் இல்லை. விஜய் டிவியில் ஒரு ஷோ நடத்தினால் 4 ஆயிரம் கொடுப்பார்கள்.

அப்போது என் மாமனார்தான் எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் சினிமாவில் நுழைய ஆசைப்படுவதை தெரிந்துகொண்டு எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் இல்லாமல் நான் சினிமாவில் வந்திருக்க முடியாது. என் மீது நம்பிக்கை வைத்த முதல் மனிதர் அவர்தான்’ என நெகிழ்வாக பேசியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

23 minutes ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

25 minutes ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

27 minutes ago

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

4 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

5 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago