Categories: latest news

சம்பளம் வாங்காம நடிச்சி எல்லாம் போச்சே!.. புலம்பும் சிவகார்த்திகேயன்!.. பராசக்தி பரிதாபம்!..

Sivakarthikeyan: கோட் படத்தில் விஜய் தனது துப்பாக்கியை கொடுக்கும் காட்சியை பார்த்த பலரும் அரசியலுக்கு போகும் விஜய் சினிமாவுக்கான தனது இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுத்துவிட்டு போகிறார் என்பதன் குறியீடாகவே புரிந்துகொண்டனர். ஆனால், அடுத்த விஜய் ஆகும் எண்ணம் எனக்கு இல்லை என சிவகார்த்திகேயன் சொன்னார். ஆனால், உள்ளுக்குள் அவருக்கு அந்த ஆசை இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

இனிமேல் அறிமுக மற்றும் சின்ன இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டாம். விஜயை போல நாமும் பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவெடுத்தார். விஜயை வைத்து துப்பாக்கி படம் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸை அழைத்து ‘சார். உங்களின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ என்றார்.

அப்படி உருவான படம்தான் மதராஸி. இடையில் இந்தி பட வாய்ப்பு வந்ததால் இந்த படத்தை விட்டுவிட்டு பாலிவுட்டுக்கு முருகதாஸ் போய்விட சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் நடித்தார். அதன்பின் சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி படத்தில் நடிக்க துவங்கினர். சூர்யா நடிக்க வேண்டிய படம் இது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை என்பதால் தனது பேன் இண்டியா கனவுக்கு ஆபத்து என சூர்யா விலகிவிட்டார்.

ஆனால், சிவகார்த்திகேயனுக்கு இப்போது பேன் இண்டியா ஆசை இல்லை. அதோடு, படத்தை தயாரிப்பது ஆகாஷ் பாஷ்கரன். இவர் உதயநிதிக்கு நெருக்கமானவர். படத்தை வெளியிடுவது ரெட் ஜெயண்ட் நிறுவனம். படத்திற்கு சர்ச்சை வந்தாலும் அது புரமோஷனுக்கு உதவும் என கணக்குப்போட்டே இந்த படத்தில் நடித்தார்.

ஆனால், ஐடி ரெய்டால் இந்த படம் அப்படியே நிற்கிறது. வருமானத்துறை அலுவலகம் சம்மன் அனுப்பியும் ஆகாஷ் பாஸ்கரன் இதுவரை ஆஜராகவில்லை. இதில் சோகம் என்னவெனில் இந்த படத்திற்கு 70 கோடி சம்பளம் பேசினார் சிவகார்த்திகேயன். சம்பளமாக வேண்டாம். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 70 கோடி மதிப்பில் தனக்கு வீடு கட்டி கொடுங்கள் என ஒப்பந்தம் போட்டார்.

படம் பாதி முடிந்தநிலையில், ஐடி ரெய்டால் படம் என்னவாகும் என்றே தெரியவில்லை. இந்த பிரச்சனையெல்லாம் முடிந்து படம் எப்போது டேக் ஆப் ஆகும் என்பதே தெரியவில்லை. வீடு கட்டி தருவதற்கும் வாய்ப்பு இல்லை. எனவே, சம்பளம் வாங்காம நடிச்சி எல்லாம் போச்சே என நெருங்கிய வட்டாரத்தில் சிவகார்த்திகேயன் புலம்பிவருகிறார் என செய்திகள் கசிந்திருக்கிறது. கடந்த பல நாட்களாகவே ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருந்த அவர் இப்போது பராசக்தி படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக இலங்கை சென்றிருக்கிறார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago