Categories: latest news

கன்னடத்திற்காக உயிரையும் கொடுப்பேன்.. கமலின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த சிவராஜ்குமார்

கமல் நடிப்பில் வரும் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகக் கூடிய திரைப்படம் தக் லைஃப் . இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்தான் நடந்தது. அப்போது சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அந்த விழாவில் கமல் பேசிய சில விஷயங்கள் மிகவும் சர்ச்சையாக பார்க்கப்படுகின்றன. அதாவது தமிழிலிருந்து பிறந்துதான் கன்னடம் என்று தெரிவித்திருந்தார் கமல்.

இந்த ஒரு கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அது மட்டுமில்லாமல் கர்நாடக மக்களிடம் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் கமல் அன்பு ஒரு போதும் மன்னிப்பு கேட்காது என்று தெரிவித்திருக்கிறார். இதை பற்றி கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசும் போது கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு இருக்கிறது.

அது அவருக்கு தெரியாது என்று தெரிவித்திருந்தார். அந்த மேடையில் கமல் பேசும் போது ராஜ்குமாருடைய குடும்பம் என்னுடைய குடும்பம். அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும் முன் உயிரே உறவே தமிழே என்று தொடங்கினேன். ஏனெனில் தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று கூறியிருந்தார்.

இதிலிருந்துதான் அவர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சிவராஜ்குமார் அதற்கு பதிலடியாக அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். கமல் சார் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. அவருக்கு தான் என்ன பேசினோம் என்று நன்றாகவே தெரியும். உரிய பதிலையும் அவர் கொடுப்பார். கன்னடம் மீது அன்பை வெளிப்படுத்துபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களில் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் அதை வெளிப்படுத்த வேண்டும். கன்னட திரைத்துறையிலேயே புதுமுகங்கள் வந்தால் அவர்களை பற்றி யாரும் பேசுவதில்லை.

kamal

பெரிய ஸ்டார்களின் படங்கள் வரும் போது மட்டும் பேசுவது சரியில்லை. நான் கன்னடத்திற்காக என் உயிரையும் கொடுப்பேன் என கமல் தக் லைஃப் விழாவில் மொழி குறித்து பேசிய சர்ச்சையான பேச்சுக்கு சிவராஜ்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார் .

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago