Categories: latest news

3 வருஷமா நடிச்சு என்னை ஏமாத்திட்டாரு!.. எனக்கு நீதி வேணும்.. குமுறும் துணை நடிகை..!

தமிழ் சினிமாவில் காதல் என்கின்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சுகுமார். அந்த திரைப்படத்திற்கு பிறகு காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்டார். அந்த படத்திற்கு பிறகு விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களை இயக்கி தோல்வியை சந்தித்த சுகுமார் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகின்றார். நீண்ட வருடத்திற்கு பிறகு அண்மையில் ஸ்டார் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெற்றி வேலப்பர் என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கின்றனர்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் அவர் மீது ஒரு துணை நடிகை பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர் செய்தியாளர்களிடம் மூன்று வருடங்கள் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது ‘தனக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றது.

கணவரை பிரிந்து பல வருடம் தனியாக இருந்த எனக்கு காதல் சுகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் அவரும் நான் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறியிருந்தார். தான் சினிமா இண்டஸ்ட்ரியல் இருப்பதால் ஒரு ஆண் துணை வேண்டும் என்பதற்காக அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தேன்.

மேலும் ஆரம்பத்தில் என்னை மிக நன்றாக பார்த்துக் கொண்டிருந்தார். தர்காவில் வைத்து தாலி கட்டி மெட்டி போட்டு விட்டார். ஆனால் மெட்டி போட்ட ஆதாரம் மட்டுமே தன்னிடம் இருக்கின்றது. தாடி கட்டிய புகைப்படம் அவரிடம் இருக்கின்றது. இருவரும் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தோம். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு வந்ததால் பலரிடம் மூன்று லட்சம் ஐந்து லட்சம் என்று கடன் வாங்கி கொடுத்தேன்.

சமீபத்தில் கூட கார் கடனில் இருப்பதால் லோன் கேட்டு என்னை மிரட்டுகிறார்கள் என்று கூறி கெஞ்சினார். பின்னர் எனது நகையை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்து அவருக்கு கொடுத்தேன். அனைத்தையும் என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றி விட்டார். தற்போது எனது தொலைபேசி எண்ணை பிளாக்கில் போட்டு விட்டார்.

மூன்று வருடங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பணரீதியாகவும் பயன்படுத்திவிட்டு என்னை ஏமாற்றி விட்டார். எனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு புகார் அளித்திருக்கின்றார். இந்த வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago