பொண்ணுங்களுக்கு இப்படியா பேரு வைப்பாங்க… சினேகன் அறிவிப்பால் அதிர்ந்த ரசிகர்கள்…
Snehan: பிரபல பாடல் ஆசிரியர் சினேகனுக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருக்கும் நிலையில் அவர்களுக்கு அவர் வைத்திருக்கும் பெயர் குறித்த சுவாரசிய அப்டேட் வெளியிடப்பட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வெற்றி பாடல்களை எழுதி சூப்பர் ஹிட் அடித்தவர் சினேகன். நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் எழுதிய எல்லா பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இருந்தும் தமிழ் பிக் பாஸ் சீசன் ஒன்றின் இவர் போட்டியாளராக கலந்து கொண்டதில்தான் இவருக்கு அதிக அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அந்த வகையில் முதல் சீசனில் இவர் எந்த வார நாமினேஷலுமே இடம்பெறவில்லை.
இறுதி வாரத்தில் பைனலிஸ்ட் ஆக நின்றபோது சினேகன் வெல்லுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் ஆரவிடம் கோப்பையை தவறவிட்டார். அவை தொடர்ந்து வெளியே வந்த சினேகன் சீரியல் நடிகை கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தது பின்னர் அறிவிக்கப்பட்டது. திருமணம் முடிந்த சில ஆண்டுகள் இருவரும் அடிக்கடி தங்களுடைய பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வழங்குவது வழக்கமாக வைத்திருந்தனர்.
சில மாதங்கள் முன்னர் தங்களுடைய கர்ப்பத்தை சுவாரசியமாக அறிவித்த ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினர். அதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்த விஷயத்தையும் வித்தியாசமாக அறிவித்து ரசிகர்களுக்கு வியப்பூட்டினர்.
இந்நிலையில், கமல்ஹாசன் சினேகன் மகள்களுக்கு தற்போது பெயர் வைத்திருக்கிறார். ஒரு மகளுக்கு கவிதை என்றும், இன்னொரு மகளுக்கு காதல் என்றும் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்திருக்கிறார். சிநேகனின் தமிழ் பற்றை இதில் கூடவா காட்ட வேண்டும் என ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.