Categories: latest news

சொந்த பணத்துல சூனியம்னு சொல்லுவாங்க! ‘வேட்டையன்’ விஷயத்துல உல்ட்டாவா இருக்கே

வேட்டையன் திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸான நிலையில் தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டமாக வந்து படத்தை கண்டுகளித்தனர். ஆரம்பத்தில் வேட்டையன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனமே எழுந்தது. ஆனால் போகப் போக மக்கள் பார்த்த பிறகு பாஸிட்டிவான விமர்சனம் இருந்து வருகிறது.

ரஜினியின் மாஸ் மற்றும் கருத்துள்ள கதை என ஒரு மிக்ஸிங் மசாலா படமாக ஞானவேல் வேட்டையன் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். போலி என்கவுண்டர்களால் சில நேரங்களில் அப்பாவி மக்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் விதமாக நல்ல ஒரு மெசேஜை கூறியிருக்கிறார் ஞானவேல்.

அதை போல கோச்சிங் செண்டர் என்ற பெயரில் பல பேரிடம் பண மோசடி செய்யும் கும்பல் குறித்தும் படம் விளக்குகிறது. ஆக மொத்தம் இன்றைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.

ஆனால் ஆரம்பத்தில் ஏன் கலவையான விமர்சனம் எழுந்தது என்பதை குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளர் சுபேர் கூறியிருக்கிறார். முன்பெல்லாம் ஒரு படத்தை ப்ரோமோட் செய்ய பத்திரிக்கைகள், குறிப்பிட்ட சேனல்கள் என இவைகளுக்குத்தான் அதிகாரம் இருக்கும். ஆனால் சோசியல் மீடியா வளர்ந்த பிறகு யார் வேண்டுமானாலும் படத்தை பற்றி விமர்சிக்கலாம் என்ற போக்கு மாறியுள்ளது.

அதனால் யூடியூப்பில் படத்தை பற்றி ரிவியூவ் செய்யும் சில கும்பல் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடமே பெரிய அளவில் பணம் கேட்டார்களாம். அதாவது பணம் கொடுத்தால் படத்தை பற்றி நேர் மறையான கருத்துக்களை சொல்கிறோம் என கூறி பேரம் பேசியிருக்கிறார்கள். ஆனால் லைக்காவோ இனிமே இப்படி கூறி போன் வந்தால் ரிக்கார்டு செய்து புகார் கொடுத்துவிடுவோம் என மிரட்டியிருக்கிறார்கள்.

அதனால்தான் லைக்காவிற்கு பாடம் புகட்டவே ஆரம்பத்தில் எதிர்மறையான கருத்துக்களை கூறி பரப்பினார்கள். மேலும் அவர்களாகவே சில பேரை செட் செய்து படம் பார்த்து வெளியே வரும் போது எதிர்மறையான விமர்சனத்தை சொல்லும் படியும் கூறி பணத்தை கொடுத்து செட் செய்திருக்கிறார்கள் என சுபேர் கூறியிருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

5 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

6 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

7 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

8 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

8 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

15 hours ago