Categories: latest news

Actor suriya: ஜெய் பீம் படத்தில் நான் செய்தது பெரிய தவறு!.. 3 வருடங்கள் கழித்து சொன்ன சூர்யா..

Actor suriya: நடிகர் சூர்யா தயாரித்து நடித்த திரைப்படம் ஜெய் பீம். 2021ம் வருடம் நவம்பர் மாதம் இப்படம் ஓடிடியில் வெளியானது. அப்படத்திற்கு முன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான சூரரைப்போற்று படமும் ஓடிடியில் வெளியானது. ஏனெனில் அந்த நேரத்தில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது.

எனவே, ஜெய் பீம் படத்தை ஓடிடியில் வெளியிட்டார் சூர்யா. இதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இனிமேல் சூர்யாவின் படங்களை தியேட்டரில் திரையிட மாட்டோம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், ஜெய்பீம் படம் ஓடிடியில் வெளியானாலும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக பணியாற்றியபோது 20 வருடங்கள் நடத்திய ஒரு வழக்கை சினிமாவாக உருவாக்கியிருந்தார் தா.ச.ஞானவேல். அடிப்படையில் அவர் ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் தகவல்களை சேகரித்து அப்படத்தை சிறப்பாக இயக்கியிருந்தார்.

இருளர் இனத்தை சேர்ந்த சிலரை திருட்டு புகாரில் பொய் வழக்கு போட்டு போலீசார் சித்ரவதை செய்த உண்மை சம்பவம் ஜெய் பீம் படம் மூலம் மக்களுக்கு தெரிய வந்தது. இந்த படம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோடு, இப்படத்தை பார்த்த முதல்வர் முக ஸ்டாலின் இருளர் இனத்திற்காக சில சலுகைகளையும் அறிவித்தார்.

அதேநேரம், இந்த படம் அடித்தட்டு மக்களை சென்று சேரவில்லை. அதற்கு காரணம் இப்படம் தியேட்டரில் வெளியாகவில்லை என்பதால்தான். தற்போது சூர்யாவின் கங்குவா படம் உருவாகி வருகிற 14ம் தேதி உலகமெங்கும் பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்த படம் தொடர்பான புரமோஷனில் சூர்யா பல தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.

ஜெய்பீம் படம் பற்றி பேசிய அவர் ‘சிவா இயக்கிய அண்ணாத்த படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது ஜெய்பீம் படத்துக்கான டிக்கெட் பற்றி முதியவர் ஒருவர் விசாரித்து கொண்டிருந்தார். அவரிடம் ‘ஜெய் பீம் படம் தியேட்டரில் இல்லை. ஓடிடியில் வெளியாகியிருக்கிறது’ என சொன்னேன். நான் சொன்னது அவருக்கு புரியவில்லை.

அப்போதுதான் ஜெய் பீம் படத்தை ஓடிடியில் வெளியிட்டது தவறான முடிவு என எனக்கு தோன்றியது. காத்திருந்து அப்படத்தை நான் தியேட்டரில் வெளியிட்டிருக்க வேண்டும்’ என கூறினார் சூர்யா.

ராம் சுதன்

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago