தெலுங்கில் சென்று பிளாப் ஆன தமிழ்ப்பட இயக்குனர்கள்... இதெல்லாம் தேவையா?

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் பட உலகைப் பொருத்த வரையில் பல தமிழ்ப்பட இயக்குனர்கள் கன்னட படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார்கள். அதே போல மலையாள இயக்குனர்கள் தமிழில் ஹிட் கொடுத்துள்ளார்கள். தமிழ்ப்பட இயக்குனர்கள் தெலுங்கில் சென்று படம் எடுத்து படுதோல்வியைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஸ்பைடர்: தமிழ்ப்பட இயக்குனர்களின் படத்தில் நடிக்க வேண்டும் என்று தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபு விரும்பினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடித்தார். அதுதான் ஸ்பைடர். அது தெலுங்கில் மட்டும் அல்லாமல் தமிழிலும் வெளியானது. இரண்டிலும் தோல்வி.
நோட்டா: தமிழில் 2 வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் ஆனந்த் சங்கர். இவர் விஜயதேவரகொண்டா நடிப்பில் நோட்டா என்ற படத்தை இயக்கினார். இது அட்டர்பிளாப். இத்தனைக்கும் விஜயதேவரகொண்டாவின் அத்தனைப் படங்களும் சாதனை புரிந்தன. இதுதான் படுதோல்வி.
மைக்கேல்: தமிழில் இஸ்பட் ராஜாவும், இதயராணியும் என்ற வெற்றிப்படத்தை எழுதி இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் தெலுங்கில் சந்தீப் கிஷன் நடித்த ஒரு படத்தை இயக்கினார். அதன் பெயர் மைக்கேல். அதிரடி ஆக்ஷன் படம். ஆனாலும் வசூலில் படுதோல்வி.
தி வாரியர்: தமிழில் ரன், சண்டைக்கோழி உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் லிங்குசாமி. இவர் தெலுங்கில் ராம் புத்தினேனி கதாநாயகனாக நடிக்க தி வாரியர் என்ற படத்தை இயக்கினார். படம் படுதோல்வி. பெருத்த நஷ்டம்.
கஸ்டடி: தெலுங்கில் ஹிட் கொடுத்த நாகசைதன்யா தமிழில் ஹிட் கொடுக்க விரும்பினார். இதனால் வெங்கட்பிரபுவை அணுகினார். அவர் கஸ்டடி என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். தமிழிலும் வெளியானது. ஆனால் படம் பரபரப்பாக இருந்தாலும் படுதோல்வி.
கேம் சேஞ்சர்: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க கேம் சேஞ்சர் படத்தை 4 ஆண்டுகளாக 450 கோடி செலவில் உருவானது. ஆனால் படம் அட்டர் பிளாப். இதனால் பல தெலுங்கு பட ஹீரோக்கள் தமிழ் இயக்குனர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.