Categories: latest news

அல்லு அர்ஜூன் வந்த போது பெண் நெரிசலில் சிக்கியது எப்படி?!.. வெளியான வீடியோ!…

Allu arjun: தெலுங்கில் முக்கிய நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜூன். கடந்த 20 வருடங்களாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுவரை அவர் தெலுங்கை தவிர மற்ற மொழி படங்களில் நடித்தது இல்லை. மற்ற மொழிகளில் அவருக்கும் மார்க்கெட்டும் இல்லை. ஆனால், புஷ்பா திரைப்படம் பேன் இண்டியா படமாக வெளியாகி தமிழ், ஹிந்தி மொழிகளிலும் ஹிட் அடித்தது.

இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே புஷ்பா 2 திரைப்படத்தை உருவாக்கினார்கள். சுமார் 2 வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. சில முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் தள்ளி வைக்கப்பட்டது. முதல் பாகத்தின் இறுதியில் வந்து கலக்கிய பஹத் பாசிலுக்கு இரண்டாம் பாகத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருந்தது.

400 கோடி பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படும் புஷ்பா 2 படம் ரிலீஸுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று கொடுத்துவிட்டது. படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. படம் வெளியாகி 10 நாட்களில் 1300 கோடி வரை இப்படம் வசூல் செய்துவிட்டது.

இன்னும் சில நாட்களில் இப்படம் 1500 கோடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புஷ்பாவின் வெற்றியை கொண்டாடத முடியாதபடி ஒரு சம்பம் நடந்துவிட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் டிசம்பர் 4ம் தேதி இரவு ஒரு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

அந்த காட்சியை பார்ப்பதற்காக அல்லு அர்ஜூன் அந்த தியேட்டருக்கு வந்தார். அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் மரணமடைந்தார். அவரின் மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜூன் மீது வழக்குபதிவு செய்த போலீசார் 2 நாட்களுக்கு முன்பு அல்லு அர்ஜூனை கைது செய்தனர். அன்று இரவே அவருக்கு பெயில் கிடைத்தும் அவரை வெளியிடவில்லை. எனவே, ஒரு நாள் இரவு சிறையில் இருந்துவிட்டு அடுத்த நாள் காலை அல்லு அர்ஜூன் விடுதலை ஆனார்.

இறந்தவர் குடும்பத்திற்கு ஏற்கனவே 25 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார் அல்லு அர்ஜூன். அதோடு, அவர்களுக்கு என்ன உதவி என்றாலும் செய்யத்தயார் எனவும் சொல்லி இருக்கிறார். மேலும், 20 வருடங்களாக என் படம் வெளியாகும்போது தியேட்டருக்கு செல்கிறேன். இந்தமுறை இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது என சொல்லி இருந்தார்.

இந்நிலையில், தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், அந்த தியேட்டருக்கு அல்லு அர்ஜூன் வந்தபோது ரசிகர்கள் எப்படி முண்டியடித்தனர், அந்த சிறுவன் மயங்கியது என எல்லாமே பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

7 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago