Categories: latest news

தக்லைஃப் படம்தான் தோல்வி… ஆனா ஜெயிச்சது கமல்..! அந்த கட்ஸ் அவருக்கிட்டதானே இருக்கு!

கமல் கன்னட மொழி குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கி தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகாமல் போனது. மன்னிப்பு கேட்டால் தான் படம் வெளியாகும் என்ற கர்நாடக அரசின் பிடியில் சிக்காமல் கமல் லாவகமாக அதே பந்தை திருப்பி சிக்சர் அடித்துள்ளார். வாங்க என்ன விவரம்னு பார்ப்போம்.

தக் லைஃப் படத்தைப் பாதுகாப்போடு வெளியிட கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது. இந்தப் படத்தை உச்சநீதிமன்றம் ரிலீஸ் பண்ணலாம்னு சொல்லிட்டது. இப்போ படம் வெளியாகி இவ்ளோ நாள் கழித்து கர்நாடகாவில் ரிலீஸ் பண்ணினா ஓடுமா என்ற கேள்வி எழுகிறது. மாநிலத்துக்கு மாநிலம் ரசனை மாறுபடுகிறது.

கர்நாடகா, கேரளா, ஆந்திராவுல ஓடுன படங்கள் தமிழ்நாட்டுல ஓடுனது இல்லை. இங்கே தோல்வி அடைந்த படங்கள் மொழிமாற்றம் செய்யப்ப்டு அங்கே நல்லா ஓடிருக்கு. தக் லைஃப் படம் கர்நாடகாவில் உள்ளவர்களுக்குப் பிடித்து அங்கே ஒருவேளை ஓடறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. அதனால கணிக்க முடியாது.

ஒரு படத்தை ரிலீஸ் பண்ணியே ஆகணும்னு கமல் முடிவு எடுத்துட்டாரு. மன்னிப்பு கேட்டா தான் ரிலீஸ் பண்ண விடுவோம்னு கர்நாடகாவில சொல்லிட்டாங்க. ஆனா இவரு மன்னிப்பு கேட்கவே மாட்டேன்கற விஷயத்துல உறுதியா இருந்தாரு. அந்த உறுதியோடு உறுதியா இருந்து அந்தப் படத்தை அங்கே ரிலீஸ் பண்ணிருக்காருன்னா கமல்தான் ஜெயிச்சிருக்காரு.

படம் ஜெயிக்குது தோற்குது அது ரெண்டாவது விஷயம். கமல் ஜெயிச்சிட்டாருல்ல. நான் மன்னிப்பு கேட்டுத்தான் உங்க ஊருக்குப் படம் வரணும்னா மன்னிப்பு கேட்காமலேயே வர வைப்பேன்கற கட்ஸ் அவருக்கிட்ட இருக்கு. அவரு நினைச்சிருந்தா கர்நாடக உயர்நீதிமன்றம் நீங்க மன்னிப்பு கேட்டுட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்கன்னு சொல்றாங்க. 10 நாள்ல பதில் சொல்றோம்னுட்டு வந்துட்டாங்க.

அதனால அவங்க ரிலீஸ் பண்ணலன்னு வந்துருக்கலாம். ஆனாலும் உச்சநீதி மன்றத்துக்குப் போறாரு. என்னோட உரிமை இது. ஒரு மாநிலத்தில் படத்தை திரையிடுவதற்கான உரிமை எனக்கு இருக்கு. சென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்கிறதுதான் அவரோட வாதம். அதை வந்து உச்சநீதிமன்றம் ரொம்ப தெளிவா புரிஞ்சிக்கிட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தை கண்டித்துள்ளது.

தொடர்ந்து அரசாங்கமே போராட்டக்காரர்களிடம் படத்தை ரிலீஸ் பண்ணும்போது கொஞ்சம் அமைதியா இருங்கன்னு கேட்க வேண்டிய சூழலை கமல் ஏற்படுத்தியுள்ளார். எப்பவுமே கமலைப் பொருத்தவரை சட்டரீதியாக பிரச்சனையை அணுகிவிடணும்னு நினைப்பார். அதையேத் தான் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

7 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

8 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

9 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

10 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

10 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

17 hours ago