Categories: latest news

ரஜினியை மறைமுகமாக சீண்டுகிறாரா வைரமுத்து? சூரியை இப்படி புகழ்கிறாரே?!

பொதுவாக தங்களுக்குப் பிடித்த ஹீரோக்களின் படங்கள் வந்து விட்டால் ரசிகர்களைக் கையில் பிடிக்கவே முடியாது. கட்அவுட்டுக்குப் பாலாபிஷேகம், செண்டை மேளம், ஆட்டம் பாட்டம், கையில் சூடம் என திரையரங்கையே திருவிழாக் கோலமாக்கி விடுவர். சில ரசிகர்கள் இன்னும் ஒரு படி மேல் போய் படம் ஓடவும், தங்களது ஹீரோக்கள் நோய் நொடியில்லாமல் நீடூழி வாழவும் அலகு குத்தி, காவடி எடுத்து, அங்கப்பிரதட்சணம் எல்லாம் செய்வார்கள்.

கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய கூத்தெல்லாம் கூட நடந்துள்ளது. அந்த வகையில் மண்சோறு சாப்பிடும் சம்பவமும் நடந்துள்ளது. அது இருக்கட்டும். இப்போது சூரியைப் புகழ்ந்து வைரமுத்து என்ன சொல்றாருன்னு பாருங்க.

மண்ணில் இருந்து தானியம் வரும். தானியம் சோறாகும். ஆனால், மண்ணே சோறாக முடியாது. இந்த அடிப்படைப் பகுத்தறிவு இல்லாதவர்கள் தன் ரசிகர்களாக இருக்க முடியாது என்று சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும். கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ரசிகர் கூட்டத்தை இப்படி நெறிப்படுத்தி வைத்திருந்தால் கலையும் கலாசாரமும் மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்.

மண்சோறு தின்றால் ஓடாது. மக்களுக்குப் பிடித்தால் மாமன் ஓடும். பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை பலே பாண்டியா என்று பாராட்டுகிறேன் என்று பாராட்டியுள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டார்களா? என்ற கேள்வி எழலாம். அது உண்மைதான். 2.0 படம் வெளியாகும்போது அந்தப் படம் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திருப்பரங்குன்றம் கோவிலில் ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு அங்கப்பிரதட்சணம் எல்லாம் செய்துள்ளார்களாம்.

அதே போல ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். அப்போதும் அதற்கு நன்றிக்கடனாக தெரிவிக்கிறோம் என மண்சோறு சாப்பிட்டார்களாம். புளூசட்டை மாறன்கூட நேத்து ஹீரோவான சூரி கூட தன் ரசிகர்கள் மண்சோறு சாப்புடறது முட்டாள்தனம்னு சொல்லிருக்காரு. 50 வருஷமா உங்க படம் வரும்போதெல்லாம் ரசிகர்கள் மண்சோறு திங்கறாங்க.

அதைக் கண்டிக்க வாய் வரல. நீங்கெல்லாம் ஒரு பெரிய மனுஷனா என்று பதிவு போட்டு இருந்தார். அது ரஜினிதான்னு பலரும் சொன்னாங்க. ஏன்னா அவரு ரசிகர்கள்தான் இதுக்கு முன்னாடி அப்படி மண் சோறு சாப்பிட்டுருக்காங்க. அந்த வகையில் இப்போது வைரமுத்து சூரியைப் புகழ்வதைப் பார்த்தால் ரசிகர்களை நெறிப்படுத்தியது சூரி தான் என்றும் ரஜினி அதைச் செய்யவில்லை என்றும் தான் சொல்லாமல் சொல்லி இருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

10 minutes ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

1 hour ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

7 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

9 hours ago

குக் வித் கோமாளியில் இனி ரக்‌ஷன் இல்ல!… இவர் தான் OG ஆங்கரா? அடுத்த பிரச்சனைக்கு தயார் போலயே!

Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்‌ஷனுக்கு பதில்…

9 hours ago

மீண்டும் இணையும் ஜோடி: தி மம்மி 4 வெளியீட்டு தேதி அறிவிப்பு!

உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்‌ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…

9 hours ago