ஜெயிலரை தாண்டிய வேட்டையன்!.. புரமோஷன் இல்லாமலே கல்லா கட்டும் லைக்கா!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 11:09:25  )
ஜெயிலரை தாண்டிய வேட்டையன்!.. புரமோஷன் இல்லாமலே கல்லா கட்டும் லைக்கா!...
X

Vettaiyan: ஜெய்பீம் பட இயக்குனர் த.ச.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம்தான் வேட்டையன். இந்த படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜெயிலர் படத்தில் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வந்த ரஜினி வேட்டையன் படத்தில் என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

அதோடு, கல்வி தந்தை என்கிற பெயரில் கொள்ளையடிக்கும் மாபியா கும்பல் பற்றியும் இப்படத்தில் பேசியிருக்கிறார்கள். ஜெய்பீம் பட இயக்குனர் என்பதால் சமூக பிரச்சனைகளை பேசிய ஞானவேல் எப்படி ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்துவார் என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

ஒருபக்கம், இந்த படத்திற்கு இதுவரை பெரிதாக புரமோஷன் செய்யப்படவில்லை. செய்தியாளர் சந்திப்பு நடக்கவே இல்லை. படம் தெலுங்கில் வெளியானால் ஹைதராபாத்தில் பிரஸ்மீட் நடக்கும். கேரளாவுக்கு திருவனந்தபுரத்தில் பிரஸ்மீட் நடக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

சமூகவலைத்தளங்களில் மட்டுமே புரமோஷன் செய்தால் போதும் என லைக்கா நினைத்துவிட்டதா என தெரியவில்லை. ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது அப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்தது. அதேபோல், வேட்டையன் பட இசை வெளியீட்டு விழாவிலும் ரஜினி பேசினார்.

அதேநேரம், லியோ படம் வெளியானபோது லோகேஷ் கனகராஜ் பல யுடியூப் சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து படத்தை புரமோட் செய்தார். விக்ரம் பட வெளியானபோதும் கமலும் ஊர் ஊராக போனார். ஆனால், ஞானவேல் அப்படி எதையும் செய்யவில்லை. ஆனாலும், இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஜெயிலர் படத்தை விட முன்பதிவு அதிகமாக இருக்கிறது. அதுவும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் ஜெயிலர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட அதிக வரவேற்பு கிடைத்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும், வெளிநாடுகளில் விஜய் படங்களுக்கே அதிக வரவேற்பு இருக்கும். ஆனால், வேட்டையன் படம் மூலம் ரஜினி விஜயையை தாண்டி இருக்கிறார்.

மொத்தத்தில் புரமோஷன் செய்யாவிட்டாலும் வேட்டையன் படம் லைக்கா நிறுவனத்துக்கு நல்ல வசூலை பெற்றுத்தரும் என நம்பப்படுகிறது.

Next Story