Categories: latest news

இதுவரை என் அப்பாவ பத்தி யாரும் இப்படி கேட்கல! விஜய் பற்றி ராதாரவி பெருமிதம்

அரசியலுக்கு தகுதிவாய்ந்தவர்தான் விஜய் என ராதாரவி சமீபத்தில் கூறியது மிகவும் வைரலாகி வருகிறது.விஜயுடன் இணைந்து கடைசியாக் ராதாரவி நடித்த படம் சர்கார். அந்தப் படத்தின் போது விஜய்க்கும் ராதாரவிக்கும் இடையே சில உரையாடல்கள் நடந்திருக்கின்றன. அதை பற்றி ஒரு பேட்டியில் ராதாரவி கூறியிருக்கிறார். சர்கார் படத்திற்கு முன் ராதாரவியும் விஜயும் இணைந்து நடித்து ரசிகர்களால் கவரப்பட்ட படம் ஃபிரண்ட்ஸ்.

அதில் மிகவும் கோபக்காரராக ராதாரவி நடிக்க அதை மிகவும் கூலாக ஹேண்டில் பண்ணும் கேரக்டரில் விஜய் நடித்திருப்பார். அதன் பிறகு சர்காரில்தான் இருவரும் சேர்ந்து நடித்தனர். சர்காரில் ஒரு மாதிரியான வில்லன் கேரக்டரில் ராதாரவி நடித்திருப்பார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ராதாரவியை தனியாக அழைத்து பேசினாராம்.

அப்போது எம்.ஆர். ராதா எம்ஜிஆரை சுடப்பட்ட வழக்கு சம்பந்தமாக கேட்டறிந்து கொண்டாராம் விஜய். அதாவது அந்த வழக்கு சமயத்தில் உங்களோட வீட்டில் உள்ளவர்களின் மனநிலை எப்படி இருந்தது என்ற கேள்வியை கேட்டிருக்கிறார் விஜய். இந்த மாதிரி கேள்வியை இதுவரை யாரும் கேட்டதில்லை.

ஏன் எம்ஜிஆரை சுட்டார்? என்ன காரணம்? எம்.ஆர். ராதாவுக்கு அப்படி என்ன கோபம் ? என்ற கேள்விகள்தான் என்னிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் விஜய்தான் முதன் முறையாக எங்க மனநிலை எப்படி இருந்தது என கேட்டார் என அந்தப் பேட்டியில் ராதாரவி கூறினார்.

அதனால் விஜய் அரசியலுக்கு வருவதை பற்றி நான் பெரிதாக பேசவில்லை. ஏனெனில் அவருக்கு அந்த தகுதி இருக்கிறது. வரட்டும் என ராதாரவி கூறினார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை காணும் விஜய் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் அதற்கான அனைத்து வேலைகளையும் கவனித்து வருகிறார்.

இந்த தேர்தல் விஜய்க்கு ஒரு சவாலான தேர்தலாகவும் இருக்கும். ஒரு பக்கம் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளை எதிர்த்து நிற்கிறார். இன்னொரு பக்கம் ரஜினி ரசிகர்கள் விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டோம் என கங்கனம் கட்டி நிற்கிறாரகள். இதையெல்லாம் தாண்டி விஜய் வந்தார் என்றால் உண்மையான தலைவன் என்ற பெயருக்கு சொந்தக்காரராக மாறிவிடுவார் விஜய்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

5 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

12 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

13 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago