விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில் விரைவில் படைத்தலைவன் படம் வெளியாக உள்ளது. படத்திற்கான இசை மற்றும் டிரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்தது. அன்பு என்ற இயக்குனர் இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். இளையராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் சண்முகப்பாண்டியன் பல காட்சிகளில் மெனக்கிட்டு சிறப்பாக நடித்துள்ளாராம். மே 23ல் படம் வெளியாக உள்ளது.
அப்பா சென்னை சூட்டிங்ல இருந்தாங்கன்னா எத்தனை பேருக்கு சாப்பாடுன்னு சொல்லிடுவாங்க. வீட்ல அம்மாவும், சமையல்காரரும் சேர்ந்து சமைத்து 12 மணிக்கு எல்லாம் சூட்டிங்ஸ்பாட்டுக்கு அனுப்பிடுவாங்களாம். மீன், இறால், நண்டு, வான்கோழி முட்டை, சிக்கன், மட்டன், முதலை வால்னு பலவிதமான கறி சாப்பாடுகள் அங்கு தினமும் 100 கிலோ வரை சமைத்து ரெடியாக இருக்குமாம்.
அப்பாவோட ஆபீஸ்ல நான் பெரிசா ஆனபிறகு எனக்கு நினைவு இருக்கு. பிரியாணி, கிரேவி, கறி சாப்பாடு எல்லாம் இருக்கும். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை கறி சாப்பாடு எல்லாருக்கும் கொடுப்போம். காலைல 10 மணி வரை டிபன் கொடுப்போம். மதியம் ஆள் வரும் வரைக்கும் கறி சாப்பாடு கொடுப்போம். அதுல எங்களுக்கு வெட்கம் எதுவும் வராது. சின்ன வயசுல இருந்தே அப்பா எங்களை அப்படி வளர்த்துட்டாங்க என்கிறார் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன்.
அப்பாவோட பிறந்தநாளுக்கு நிறைய பேரு பார்க்க வருவாங்க. விருந்து மாதிரி வச்சாதான் வர்றவங்களோட வயிறும் நிறையும். மனசும் நிறையும். அதனால அப்படித்தான் எல்லா வகையான கறி சாப்பாடும் கொடுப்போம்.
இப்பவும் அப்பாவோட பிறந்தநாளுக்கு பிரியாணி, விருந்துன்னு செட்டப் பண்ணி கோவில்ல வச்சிக் கொடுப்போம். சிக்கன், மீன், காடை, மட்டன், சில்லி சிக்கன், சிக்கன் கிரேவி, ஃபிஷ் கிரேவி, நெய் சோறுன்னு எல்லாமே வீட்ல சமைச்சிக் கொடுப்போம். எத்தனை பேரு வந்தாலும் வீட்லதான் சமைப்போம்.
அந்தப் பழக்கம் எப்பவுமே உண்டு. ஸ்கூல்ல படிக்கும்போதே எத்தனை ப்ரண்ட்ஸ்னு கேட்பாங்க. எல்லாரும் இதெல்லாம் சாப்பிடணும்னு சொல்றாங்கன்னு சொல்வேன். அதே மாதிரி எல்லாருக்கும் சமைச்சி ரெடியா டிபன்ல கொடுத்து அனுப்புவாங்க அம்மா என்கிறார் சண்முகப்பாண்டியன்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…