Categories: latest news

36 மணி நேரமா தூங்காம விஜயகாந்த் நடிச்சிருக்காரு… ஆனா படைத்தலைவனை யாரும் கண்டுக்கலையே?!

விஜயகாந்த் குறித்து பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்பு ஒரு விஷயத்தைப் பகிர்ந்தார். அவரோட தயாரிப்புல 1996ல் விஜயகாந்த் அலெக்சாண்டர் படத்தில் நடித்தார். கதை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம். ரஜினி, கமலுக்குப் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இவர்தான். அந்த வகையில் அலெக்சாண்டர் படத்தில் விஜயகாந்த், சங்கீதா உள்பட பலர் நடித்துள்ளனர். கேயார் இயக்கியுள்ளார்.

அந்தப் படத்து கதை விஜயகாந்துக்குப் பிடிக்கல. அவர் எப்படி சொல்றதுன்னு தெரியல. அதனால மகன் சுப்புவிடம் கதை ஒண்ணும் சரிபட்டு வரலன்னு சொல்கிறார். நான் சொல்லாத மாதிரி நீங்க அப்பாக்கிட்ட சொல்ல முடியுமான்னு கேட்குறார் விஜயகாந்த்.

அதை பஞ்சு மகனிடம் ராவுத்தர் கேட்கிறார். பஞ்சுவிடம் போய் அதை எல்லாம் சொல்லமுடியாது. நான் பார்த்துக்கறேன்னு சொல்லிடுறாரு. உடனே விஜயகாந்தை காம்ப்ரமைஸ் செய்து நடிக்க வைக்கிறார். படத்துல கன்டெய்னர் பைட் ஒண்ணு எடுத்தாங்க. எக்ஸ்பிரஸ் அவென்யுவா இப்போ இருக்கு.

அது அப்போ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆபீஸா இருந்தது. அங்கே ஒரு இன்டோர்ல தொடர்ந்து சூட்டிங். ரிலீஸ் டேட் நெருங்கிட்டதால 36 மணி நேரம் விஜயகாந்த் தூங்காம நடிச்சிக் கொடுத்தார். பஞ்சு அருணாச்சலம் மகன் பிரகாஷ்ராஜை 5 மணி நேரம் ரெஸ்ட் எடுங்கன்னு அனுப்புவாரு. இன்னொரு ஆர்டிஸ்டை 4 மணி நேரம் தூங்கிட்டு வாங்கன்னு சொல்வாரு. ஆனா விஜயகாந்த் தூங்கவே மாட்டாராம்.

அடுப்புல வெந்நீர் கொதிச்சிக்கிட்டு இருக்குமாம். டயர்டா ஆனாருன்னா அதுல இருந்து நாலு சொம்பை தலையில ஊத்திக்கிட்டு வேட்டியைக் கட்டிட்டு நிப்பாராம். ஷாட் ரெடியானதும் டிரஸ் எல்லாம் போட்டுட்டு நடிச்சிக் கொடுத்துடுவாராம். ஒரு கட்டத்துல முகம், கண் எல்லாம் சிவக்க ஆரம்பிச்சிடுச்சாம். ஒரு படம் டிலே ஆகிடக்கூடாது. சொன்ன டேட்ல படம் ரிலீஸ் ஆகணும்கறதுக்காக உடலை வருத்தி விஜயகாந்த் நடித்த படம்தான் அது.

இது மாதிரி விஜயகாந்த் எவ்வளவோ பேருக்கு உதவி பண்ணிருக்காரு. இன்னைக்கு அவரது வாரிசு சண்முகப்பாண்டியன் நடித்த படைத்தலைவன் படத்துக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல். அது தவிர கடைசி நேரத்துல 10 கோடி கொடுத்தாகணும்னு நெருக்கடி. அது தவிர படத்துக்கு பெரிய பப்ளிசிட்டி இல்லை என பல விஷயங்களைச் சொன்னாங்க.

அதனால கடந்த 23ம் தேதி படம் வெளியாகாமல் போனது. விஜயகாந்த் இந்தத் திரை உலகிற்கு எவ்வளவோ விஷயங்கள் செய்துள்ளார். ஆனால் அவரது மகன் படத்துக்கு வரும் சிக்கலை யாருமே தீர்க்க முன்வரலயே என்ற கேள்வி எழுகிறது. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

2 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

14 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

15 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

16 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

22 hours ago