Categories: latest news

சிம்பொனின்னா என்னன்னு தெரியுமா? நாளை இளையராஜாவுக்கு உள்ள சவால் இதுதான்!

இளையராஜா லண்டனுக்குப் போகிறார். நாளை சிம்பொனியை அரங்கேற்றுகிறார். இது உலக அரங்கில் உற்றுக் கவனிக்கப்படும் விஷயம். கொஞ்சம் அலசலாம் வாங்க…

4 வயலின், பியானோ, ப்ளூட் எல்லாம் வெச்சி வாசிச்சிட்டு அதை சிம்பொனின்னு தமாஷ் பண்ணாதீங்கப்பான்னு இசைஞானி இளையராஜா சொல்கிறார். பீத்தோவான், மொஷார்ட், ஹேடன் மாதிரி உலக மகா இசை மேதைகள் ஒரே நேரத்துல கிட்டத்தட்ட 100 இசைக்கலைஞர்களின் கருவிகளையும் தன்னோட கை அசைவில் கட்டுப்படுத்தி வாசிக்க வைக்கப் போகிறார் இளையராஜா.

வெஸ்டர்ன் கிளாசிக்கல்: அது வழக்கமா அவர் வெளிநாட்டுக் கச்சேரிகளில் வாசிக்கிறதுதானேன்னு கேட்கலாம். சங்க இலக்கியத்துக்கும், இசைத்தமிழ் வெண்பாவுக்கும் என்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அதே போல இசையை முறையா படிச்சிட்டு அதற்கே உரிய இலக்கணத்தோடு இசை அமைக்கிறார் இளையராஜா. அதிலும் ஒரு படி மேல போய் இந்திய இசை வாடையே இல்லாம சுத்தமான வெஸ்டர்ன் கிளாசிக்கல் வாசிக்கப்போகும் ஒரே இந்திய இசை அமைப்பாளர் இளையராஜாதான்.

தியரி: வெஸ்டர்ன் கிளாசிகல் இசைக்கருவிகளில் வயலின், ஸ்டெல்லோ, புல்லாங்குழல், கிளாரிநெட், சாக்ஸபோன், தாள இசைக்கருவிகள் ஒரே நேரத்துல வாசிக்கப்படும். அதற்கேற்ப தியரியாக இசைக்குறிப்புகளை இளையராஜா எழுதியுள்ளார். சினிமா பாட்டுக்கு பெரிசா இலக்கணம் இருக்காது.

சிம்பொனி இலக்கணம்: யார் வேணாலும் நல்லாருக்குன்னு ரசிப்பாங்க. ஆனா கர்நாடக இசைக்கு கீர்த்தனைகள் உணர்வுப்பூர்வமா இருக்கணும். கீர்த்தனையில் பல்லவி, அனுபல்லவி, சரணம், நரவல்னு 4 பாகம் இருக்கு. அதுபோல சிம்பொனியிலும் இருக்கு. பல்லவி, சுருதி, சரணம், அதுல டெவலப்மெண்ட், இம்ப்ரூவைசேஷன், கவுண்டர் பாய்ண்ட் எல்லாம் மேற்கத்திய கிளாசிக்கல் இசையை நுணுக்கத்தோடு சொல்ல வேண்டும். மறுபடியும் ஒரிஜினல் தீம் ஸ்கோருக்கு வந்து முடிக்க வேண்டும். அதுதான் சிம்பொனி.

40 வருஷத்துக்கு முன்: இளையராஜா 40 வருஷத்துக்கு முன்னாடியே சிம்பொனியைத் தழுவி சில பாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். சுந்தரி கண்ணால் ஒரு சேதி, ஓ பிரியா… பிரியா, என் இனிய பொன்நிலாவே, மடை திறந்து, நினைவோ ஒரு பறவை ஆகிய பாடல்களைச் சொல்லலாம்.

மிகப்பெரிய சவால்: சிம்பொனியில் மிகப்பெரிய சவால் ஒன்று உண்டு. இதுவரை உலகில் எந்த இசை அமைப்பாளரும் வாசிக்காத, தழுவாத, தனித்துவமான இசையை அதுக்கே உரிய இலக்கணத்தோடு தரணும். இதுல இளையராஜா தனக்கே ஒரு சவாலையும் வைத்துள்ளார்.

ஒரு இந்தியன் வந்து இந்திய இசையை வாசிச்சிட்டுப் போயிட்டான்னு யாரும் சொல்லக்கூடாது. அதனால எந்த இடத்திலும் இந்திய இசையின் டச்சே வராதவாறு பார்த்துக்கறதுக்காக ரொம்பவே மெனக்கிட்டுள்ளாராம் இளையராஜா. இவ்வளவு சவாலான வெஸ்டர்ன் கிளாசிக்கல் தியரியை எழுத வெறும் 34 நாள்கள்தான் ஆனதாம்.

sankaran v

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

14 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

15 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago