Categories: latest news

கோட் சக்சஸ் பார்ட்டியில் வெங்கட்பிரபு ஏன் மிஸ்ஸிங்?!.. இதான் பஞ்சாயத்தா?!….

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளான திரைப்படம் தி கோட் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

படத்தில் விஜயுடன் சினேகா மீனாட்சி சவுத்ரி பிரசாந்த் மோகன் பிரபுதேவா பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருந்தார்.

இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜயின் வயதை குறைவாக காட்டுவதற்காக டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் படத்திற்கு கூடுதல் ஹைப்பாக இருந்தது ஒரே ஒரு பாடலுக்கு திரிஷா நடனம் ஆடியது தான். அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இப்படி பல அம்சங்களைக் கொண்ட இந்த தி கோட் திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக அதன் தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டிருந்தார்.

ஒட்டுமொத்தமாக தி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் 455 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் தயாரிப்பு நிறுவனம். இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை சமீபத்தில் படத்தில் நடித்த விஜய் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ராகுல் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் சகோதரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கேக் வெட்டி கொண்டாடினீர்களே. அதில் படத்தின் இயக்குனர் இருந்தாரா என்ற ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார்.

அதன் பிறகு தான் ரசிகர்களும் இந்த கேள்வியை கேட்க தொடங்கினர். ஏன் வெங்கட் பிரபுவை அழைக்கவில்லை? வேட்டையன் திரைப்படத்தை விஜயுடன் சேர்ந்து பார்த்த வெங்கட் பிரபு கேக் வெட்டி கொண்டாடும்போது மட்டும் ஏன் அழைக்கப்படவில்லை என்று அனைவரும் கேட்டு வருகின்றனர்.

இதற்கு கோடம்பாக்கத்தில் உள்ளோர் கூறிய தகவல் இதுதான். அதாவது ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால் கண்டிப்பாக அதன் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஏதாவது ஒரு வகையில் மனக்கசப்பு வரத்தான் செய்யும். அப்படி ஏதேனும் இருந்ததா என தெரியவில்லை.

ஆனால் படம் ரிலீஸ் ஆன பிறகு வெங்கட் பிரபுவை பல மீடியாக்கள் தொடர்பு கொண்டு பேட்டி எடுக்க அழைத்து இருக்கின்றனர். ஆனால் அதற்கு வெங்கட் பிரபு தலையசைக்கவே இல்லையாம். ஏதோ பட்டும் படாமலும் இருந்ததாக சொல்கிறார்கள். வெங்கட் பிரபு வராததற்கு உண்மையில் அவர்களுக்குள் என்ன நடந்தது என்பதை பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கூறினால்தான் தெரியும் என கோடம்பாக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

11 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

12 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

12 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

14 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

21 hours ago