ரஜினி காட்டிய அந்த சைகை! பார்த்ததும் ஷாக் ஆயிட்டேன்.. அபிராமி சொன்ன சீக்ரெட்
ரஜினி நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் வேட்டையன். ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. சமீபத்தில் தான் வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
அதுவரை கூலி திரைப்படத்தைப் பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் இந்த ட்ரெய்லர் வெளியானதில் இருந்து வேட்டையன் திரைப்படத்தை பற்றி சமூக வலைதளங்களில் அனைவரும் பேசிக்கொண்டு வருகிறார்கள் .மேலும் வேட்டையன் திரைப்படத்தின் ப்ரோமோஷனையும் ஆரம்பித்து விட்டார்கள்.
படத்தில் நடித்த நடிகர்கள் youtube-யில் பல பேட்டிகளில் வேட்டையன் திரைப்படத்தை பற்றியும் அவர்களுக்கு நடந்த அனுபவங்களை பற்றியும் கூறி வருகிறார்கள். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருக்கிறார். இவர்களுக்கு மகனாக பகத் பாசில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் இணைந்து அமிதாப் பச்சன் ராணா ரித்திகா சிங் துஷாரா விஜயன் என முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். மேலும் வேட்டையன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அபிராமியும் நடித்திருக்கிறார் .சமீப காலமாக அபிராமி திரைப்படங்களில் பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
அதேபோல வேட்டையன் திரைப்படத்திலும் அவருடைய கதாபாத்திரம் என்பது முக்கியமானதாக இருக்கும் என்று அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அது மட்டுமல்ல படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை பற்றியும் அபிராமி கூறி இருக்கிறார்.
படத்தில் அமிதாப்பச்சனை தவிர மற்ற எல்லா நடிகர்களுடனும் காம்பினேஷன் சீன்கள் இருப்பதாக அபிராமி தெரிவித்தார். அதிலும் ரஜினியுடன் அதிகளவு காட்சிகளில் நான் நடித்திருக்கிறேன். அதில் ஒரு சீனில் ரஜினியை பார்த்து பக்கம் பக்கமாக நான் வசனங்களை சொல்ல வேண்டும்.
அப்போது அந்த வசனங்களை ஒரே டேக்கில் நான் முடித்து விட்டேன். நான் முடித்ததும் ரஜினி என்னைச் சுட்டிக்காட்டி பக்கத்தில் இருந்தவரிடம் அவருடைய கண் புருவத்தை மேல் உயர்த்தினார். அதாவது என்னம்மா நடிக்கிறா பாரு என்ற வகையில் அவர் அந்த சைகையை காட்டியதாக அபிராமி கூடினார்.
இதுவே எனக்கு ஒரு பெரிய காம்ப்ளிமென்ட்டாக இருந்தது. ரஜினி இப்படி சொல்லிட்டாரே என நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். எனக்கு இது ஒரு சர்ப்ரைஸ் ஆகவும் அது இருந்தது என அபிராமி கூறினார்.