நான் அப்படி பேசியிருக்கக் கூடாது.. ஏழரை நாட்டுச்சனி விவகாரம் பற்றி பப்லு கொடுத்த விளக்கம்

by ROHINI |
radhika
X

radhika

சில நாட்களுக்கு முன்பு ஒரு மேடையில் வாணி ராணி சீரியல் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி திரையில் காட்ட அதை பார்த்ததும் நடிகர் பப்லு இது வேண்டாம் ஏழரை நாட்டு சனி என சொல்லி அந்த புகைப்படத்தை பற்றி சொல்ல மறுத்துவிட்டார். அதை பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் விளக்கமாக கூறியிருக்கிறார். என்னுடைய கெரியரில் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் என்று சொன்னால் அரசி என்ற தொடர் அதன் பிறகு வாணி ராணி என்ற தொடர். இந்த இரண்டு தொடர்களை தான் சொல்லுவேன். என்னுடைய பெர்ஃபார்மன்சை வெளிப்படுத்திய நிறுவனமும் ரேடான் நிறுவனம் தான்.

வாணி ராணி சீரியலில் என்னை அழைத்து ஏன் சார் ஓவரா நடிக்கிறீங்க? அந்த சீனில் ஏன் ஓவரா பண்ணுறீங்க? மேடம் திட்டுறாங்க என கூறினார்கள். அதனால் கண்ட்ரோல் பண்ணி திட்டு வாங்காமல் நடிக்கணும். அப்படின்னா திட்டு வாங்காமல் நடிக்க முடியுமா என நானே கண்ட்ரோல் பண்ணி ட்ரை பண்ணேன். வாணி ராணியில் என்னை ஃப்ரீயாக விட்டிருந்தால் வேறு மாதிரி பண்ணி இருப்பேன். ஆனால் ஓவரா பண்ணா திட்டுவாங்களே என நினைத்து நினைத்து நினைத்தது தான் அந்த சீரியல் நடிப்புடா.

என்ன சார் நீங்க? நூறு ரூபா கொடுத்தா நான் இந்த மாதிரி நடிப்பேன். சின்ன கேமரானா வேறு மாதிரி நடிப்பேன். பெரிய கேமரானா வேற மாதிரி நடிப்பேன். அப்படி எல்லாம் இல்லாமல் இதற்கு இவ்வளவு கொடுத்தால் போதும் என கணக்கு போட்டு நடித்தது தான் வாணி ராணி சீரியல். ஆனால் அன்று நான் மேடையில் பேசியது என்னுடைய ஆதங்கம் தான். என்னை பொறுத்த வரைக்கும் இப்போ நாம் நன்றாக இருக்கிறோம். அதனால் நல்ல விஷயங்களை பேசுவோம். கெட்ட விஷயங்களை எல்லாம் நாம் நினைக்க வேண்டாம்.

அதையெல்லாம் தாண்டி வந்து விட்டோம். அப்படி இருக்கும் பொழுது இந்த புகைப்படத்தை காட்டுனீங்க. அதனால் என்னால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. கொட்டி விட்டேன். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நல்ல விஷயங்கள் எவ்வளவு பேசினாலும் வைரல் ஆகாது. கெட்ட விஷயங்கள் வைரல் ஆகின்றன. என்ன சார் ராதிகா மேடத்தை பற்றி இப்படி பேசிட்டீங்கனு கேப்பாங்க. இதுதான் வைரலாக போய்க்கொண்டிருக்கிறது என நிறைய பேரு கேட்டால் அப்படியா சார் வைரல் ஆயிருச்சா அப்படின்னு நான் நினைப்பேன்.

ஆனால் அந்த புகைப்படத்தை பார்த்து நல்ல ஒரு அனுபவம். நல்ல ஒரு தொடர் என பொய் பேசி இருக்கலாம். ஆனால் அது எனக்கு வராது. அதிலிருந்து எல்லா பேட்டிகளிலும் இதைப் பற்றி தான் கேட்கிறார்கள். ஆமா சார் சொல்லிட்டேன். அவங்க அப்படித்தான் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இதே கேள்வியை ராதிகாவிடம் போய் கேட்டால் அதற்கு அவருடைய பதில் ஆமாம் அவனை நான் செருப்பால அடிச்சேன். கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுனேன். அதை அவங்க பெருமையா தான் எடுத்துப்பார்கள் .இதையெல்லாம் விட்டு அப்படியா வைரல் ஆகிடுச்சா என்ன பத்தி தப்பா பேசிட்டானா என அவர்கள் hurt ஆக மாட்டார்கள். அது ராதிகாவுடைய பர்சனாலிட்டி. ஆனால் நான் இதை சொல்லி இருக்கக் கூடாது தான். பேசி இருக்க கூடாது தான் .சொல்லிட்டேன் என பப்லு கூறி இருக்கிறார்.

Next Story