மாட்டிக்கினாரு ஒருத்தரு!. லட்டு பத்தி எப்படியெல்லாம் பேசி இருக்காரு பவன் கல்யாண்!. வீடியோ பாருங்க...

Pawan kalyan: நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறும் போது பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். முன்பு சொன்ன ஒரு கருத்து இப்போது அரசியல்வாதியாக இருக்கும் அதே நடிகர் சொல்லும் கருத்திற்கு நேர் எதிராக இருக்கும். எனவே, அந்த வீடியோவை எடுத்துப்போட்டு கலாய்ப்பார்கள்.

அதேபோல், ஒரு விஷயத்திற்கு ஒரு கருத்து சொல்லி அதன்பின் வேறு கருத்து சொன்னாலும் மாட்டிக்கொள்வார்கள். இயக்குனர் சீமானை பல விஷயங்களில் அப்படி ட்ரோல் செய்திருக்கிறார்கள். கமல்ஹாசன் கூட இதில் சிக்கினார். இனிமேல், நடிகர் விஜயும் இதில் சிக்குவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

இந்நிலையில், தெலுங்கு நடிகர் பவன் கல்யாணும் இதில் சிக்கியிருக்கிறார். ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோவிலில் லட்டு செய்ய வாங்கப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு சமீபத்தில் பகீர் தகவலை சொன்னார்.


இதையடுத்து கோவிலில் தவறு நடந்திருப்பதால் நான் பரிகார விரதம் செய்யப்போகிறேன் என நடிகர் பவன் கல்யாண் அறிவித்தார். ஒருபக்கம், ஒரு சினிமா விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கார்த்தி ஆந்திரா போன போது நிகழ்ச்சியை நடத்தும் ஆங்கர் ‘லட்டு வேணுமா’? என கேட்க கார்த்தியோ சிரித்துக்கொண்டே ‘லட்டு பற்றி பேசக்கூடது. அது சென்சிபிள் டாப்பிக்’ என சொன்னார்.

இதனால் கோபமடைந்த பவன் கல்யாண் ‘லட்டு சென்சிபில் மேட்டர் என சொல்லி சிரிக்க அது என்ன ஜோக்கா?. இது தவறு. ஒரு நடிகராக உங்களை மதிக்கிறேன்.. இப்படி பேசக்கூடாது’ என சொல்லி இருந்தார். இதைத்தொடர்ந்து தனது பேசுக்காக கார்த்தி வருத்தம் தெரிவித்து டிவிட் போட்டார்.

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு ஒரு அரசியல் மேடையில் லட்டு பற்றி பவன் கல்யாண் பேசிய வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து ‘துணை முதல்வர் பவன் கல்யாண் சார். நடிகர் பவன் கல்யாண் பேச்சுக்கும் கண்டனம் தெரிவியுங்கள்’ என பதிவிட்டு வருகிறார்கள்.

Related Articles
Next Story
Share it